ஒவ்வொரு மாதமும் தெய்பிறையில் வரக்கூடிய சதுர்திசி திதியைதான் நாம் சிவராத்திரி என்று எடுத்துக்கொள்கிறோம். அதுவே மாசி மாதத்தில் வரும் சதுர்திசி தியைதான் நாம் மகாசிவராத்திரியாக எடுத்துகொள்கிறோம். மார் 8ம் தேதி இரவு 8 மணிக்கு மேலேதான் சதுர்திசி ஆரம்பிக்கிறது. அதாவது தேய்பிறை சதுதிசி திதி ஆரம்பிக்கிறது.
மகா சிவராத்திரி தொடர்பாக நீங்கள் பூஜைகள் செய்ய வேண்டும், பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், மார்ச் 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு மேலாகத்தான், நீங்கள் செய்ய வேண்டும்.
300 வருடங்களுக்கு பிறகு வரக்கூடிய ஒரு அற்புதமான மகா சிவராத்திரி இது. சுக்ரவாத பிரதோஷமும் மகாசிவராத்திரியும் சேர்ந்து வரும் நாள் இது. நீங்கள் கண் விழிக்க வேண்டும் என்று நினைத்தால், இரவு 8.20 மணிக்கு மேல் பூஜையை ஆரம்பித்துவிட்டு, நீங்கள் கண் விழிக்கலாம். ஒரு சிலர் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். 8ம் தேதி முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். இந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் சொன்னால் போதும். இதனால் முழு பலன் கிட்டும். இந்த விரதம் இருப்பதால் முன் ஜென்ம பாவங்கள் நீங்கும். நோய்கள், வறுமை நீங்கும். நாம் செய்யக்குடிய பூஜைக்கு இரு மடங்கு பலனை மகா சிவராத்திரி கொடுக்கப்போகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“