83ம் ஆண்டு, ஜூலை மாதம் 29ம் தேதி வெளியான ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமான ரேவதிக்கு பூர்வீகம் என்னவோ கேரளம்தான். ஆனால் முதல் படத்திலேயே அச்சு அசல், தமிழ் கிராமத்து பெண்ணாக வலம் வந்தார்.
Advertisment
பல ஊர்களில் ஒரு வருடத்துக்கு மேல் ஓடிய இந்தப் படத்தின் நாயகி முத்துப்பேச்சி, முதல் படத்திலேயே ரசிக மனங்களில் இடம்பிடித்தார்.
சித்ரா லட்சுமணனுக்கு ஒரு தயாரிப்பாளராக ‘மண்வாசனை’ தான் முதல் திரைப்படம். மூன்று வருடங்களாக சிரமப்பட்டு பாரதிராஜாவின் கால்ஷீட் கிடைத்து ஆரம்பித்த படம்.
ஒருமுறை ரேவதி, சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்..
Advertisment
Advertisements
அப்போது மண்வாசனை படம் ஷூட்டிங் போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை ரேவதி நினைவு கூர்ந்தார்.
மண்வாசனை படம் ஷூட்டிங் அப்போ, ஒரு சீன்ல காந்திமதி அக்கா வீட்டுக்கு போயிட்டு நான் ஏதேதோ சொல்லிட்டு நடந்துட்டே போவேன். அந்த சீன் தான் எனக்கு பெரிய சவாலா இருந்தது. ஏன்னா நான் அந்தமாதிரி பொண்ணே கிடையாது. அந்த பாஷை, உடல் மொழி எல்லாம் எனக்கு தெரியாது. பாவாடை சட்டை, தாவணி எல்லாம் போட்டது கிடையாது.
இது எல்லாம் ஒரு சிங்கிள் ஷாட்டா இருந்தது. அந்த சீன் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்.
கிளைமாக்ஸ்ல ஒரு சீன்ல நான் கத்தி பேசணும், ஆனா எனக்கு வரல.. அந்த 16 வயசுல அதெல்லாம் நான் வாழ்க்கையில எங்க பண்ணிருப்பேன். அப்போ அவரு ஓங்கி என்னை அறைஞ்சு கத்துனாரு… நான் கத்திட்டேன். ஆனா அது எனக்கு அறையா தோனல.
அந்த லெவல்ல என்னை தள்ளுறதுக்கு அப்படி பண்ணதா நினைச்சேன்.
ஆனா பாரதி ராஜா சார்க்கு முன்னாடியே பாண்டியன் கிட்ட இருந்து நான் ஒரு அறை வாங்குனேன்.
ஐயோ அந்த மார்கெட் சீன்ல.. பாண்டியன் கிட்ட என்னை அடிக்க சொன்னாரு. அவனுக்கு என்னை அடிக்கவே வரல..
ஏய் என்னடா இது, அவ கண்ணத்துல அடிக்கணும், காதை தொடாதேன்னு கத்துனாரு.
பாவம் பாண்டியன் முதல் தடவை ஒரு பொண்ண அடிக்கிறான். அவனுக்கு வரவே இல்லை. அப்போதான் பாண்டியனை விட்டாரு ஒரு அறை.
அந்த கோவத்துல வந்து படார்னு என்னை விட்டான் ஒரு அறை. எனக்கு ஒண்ணும் கேட்கல. காது ஊய்ய்ய்னு இருந்தது. அந்த ஷாட்ல பார்த்தா 4 விரலும் பதிஞ்சி இருக்கும்.
ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை ஒரு குழந்தையா தான் எல்லாரும் நடத்துனாங்க…
ஒரே ஒரு விஷயம் தான். புடவைய நெஞ்சுல கட்டிட்டு குளிக்கிற ஒரு சீன் இருந்தது. அப்போ நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அன்னைக்கு ஷூட்டிங்கே கேன்சல் ஆயிடுச்சு.
அன்னைக்கு என்னோட அங்கிள் என்கிட்ட வந்து, இங்க பாரு இந்த கிராமத்துல எல்லாரும் இப்படி தான் குளிப்பாங்க, சொன்னாரு.
பெஸ்ட் என்னனா? ஒரு 4,5 பெண்களை வரவழைச்சு அந்த ஃபிரேம்க்கு வெளியில குளிக்க வச்சாங்க. அந்த ஷாட் ரெடி ஆகும் போது அந்த பெண்கள் தான் என்கூடவே இருந்தாங்க… இப்படி பல விஷயங்களை ரேவதி அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“