தோல் பராமரிப்பு என்பது நேரமெடுக்கும் விஷயம். அதற்காக ஆடம்பரமான தயாரிப்புகள் தேவை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. உங்கள் சருமத்திற்கு எது சிறந்தது, நீண்ட காலத்திற்கு உங்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
Advertisment
பால் மற்றும் ரொட்டி ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே தேவைப்படும் எளிதான ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளது!
ஆம், நீங்கள் படித்தது சரிதான். பால் மற்றும் ரொட்டி காம்பினேஷன்’ சிறந்த காலை உணவு மட்டும் அல்ல; உங்கள் சருமம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், இந்த ஃபேஸ் பேக்கை நினைவில் கொள்ளுங்கள்!
எப்படி செய்வது?
ஒரு துண்டு ரொட்டியை எடுத்து சிறியதாக உடைக்கவும். அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன், மூன்று தேக்கரண்டி பால் சேர்க்கவும். பால் புதியதாகவும், வேகவைக்கப்படாததாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், அதன் மூலத்தன்மை மற்றும் புரத உள்ளடக்கம் மாறாமல் இருக்கும்.
ரொட்டி அனைத்து பாலையும் உறிஞ்சி மென்மையாக மாறியதும், துண்டுகளை ஒரு கரண்டியால் நசுக்கி பேஸ்ட் செய்யவும்.
முதலில் உங்கள் முகத்தை கழுவவும், பின்னர் சிறிது ஈரமாக இருக்கும் வகையில் முகத்தை துடைக்கவும். பால் மற்றும் பிரட் பேஸ்ட்டை முகம், கழுத்து, கைகளில் தடவவும். குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
அது காய்ந்ததும், உங்கள் விரல்களைப் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்து, உலர்ந்த பிரட் துண்டுகளை தேய்க்கவும். உங்கள் ஸ்க்ரப் வரும் போது அதனுடன், இறந்த சரும செல்களுடன் சேர்ந்து வரும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் ஒரு புத்துணர்ச்சியை உணர்வீர்கள். இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தலாம்.
வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி உலர வைக்கவும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை செய்யுங்கள்.
கூடுதல் நன்மைகளுக்காக நீங்கள் சிறிது தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கலாம். ஆனால் உங்கள் தோல் மிகவும் உணர்திறன் கொண்டதாக இருந்தால், அதை அதிகமாக தேய்க்கக்கூடாது, நிச்சயமாக ஐந்து வினாடிகளுக்கு மேல் இருக்காமல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், பால் ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் நினைத்தால், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“