மங்கலங்கள் அருளும் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது மரபு. இதனால் அம்பிகை மனம் மகிழ்ந்து நம் இல்லத்தில் சகல சுபிட்சங்களையும் நிறையச் செய்வாள் என்பது நம்பிக்கை.
இந்தாண்டு நவராத்திரி விழா, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஆண்களும், பெண்களும் அந்தந்த நாளுக்கான நிறத்தில் ஆடைகள் அணிந்து அம்மனை வழிபட்டு மகிழ்வார்கள். அதன்படி, 9 நாட்கள் எந்தெந்த நிறம் மற்றும் எந்த நாள் அன்னை பராசக்தியை என்ன அவதாரத்தில் வணங்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாள் 1 (15 அக்.) வெள்ளை
ஷைலபுத்ரி தேவியை வணங்கும் முதல் நாளன்று வெண்ணிற ஆடைகளை அணிந்து, பராசக்தியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.
நாள் 2 (16 அக்.) சிவப்பு
பிரம்மச்சாரிணி தேவியை வணங்கும் நாளில் சிவப்பு நிற ஆடை அணிவது நல்லது.
நாள் 3 (17 அக்.) அடர் நீலம்
சந்திகாண்டா தேவியை வணங்கும் நாளில் அடர் நீல நிறத்தில் (Royal blue) ஆடைகள் அணியலாம்.
நாள் 4 (18 அக்.) அடர் மஞ்சள்
குஷ்மான்டா தேவி நாளில், பெண்கள் அடர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வழிபடலாம்.
நாள் 5 (19 அக்.) பச்சை
ஸ்கந்தமாதா தேவியை வணங்கும் இந்நாளில் பச்சை நிற ஆடை அணியலாம். பச்சை நிற ஆடைகளில் அம்பாளுக்கு பூஜை செய்தால், உங்கள் வாழ்வில் நிம்மதியும், செழிப்பும் நிலைத்து நிற்கும்.
நாள் 6 (20 அக்.) சாம்பல்
காத்யாயனி தேவியை வணங்கும் இந்நாளில் சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்.
நாள் 7 (21 அக்.) அரஞ்சு
நவதுர்கை தேவியை வணங்கும் நாளில் ஆரஞ்சு நிற ஆடைகளை அணியலாம். ஆரஞ்சு நிறத்தில் நவதுர்கை தேவியை வழிப்படுவது மிகவும் நல்லது
நாள் 8 (22 அக்.) மயில் பச்சை
மயில் பச்சை மிக அழகான நிறங்களில் ஒன்று. மஹா கௌவுரியை வணங்கும் இந்நாளில் மயில் பச்சை நிற ஆடைகளை அணியலாம்.
நாள் 9 (23 அக்.) பிங்க்
சித்திதாத்ரி தேவியை வணங்கும் இந்நாளில் பிங்க நிற ஆடைகளை அணிய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“