சின்னத்திரையின் புதுமணத் தம்பதிகளான, அபிநவ்யா- தீபக்’ முதல் மாத திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.
தீபக்’ கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இவரும் சீரியல் நடிகை அபிநவ்யா-வும் கடந்த ஓராண்டுக்கு மேல் காதலித்து வந்தனர். செய்தி வாசிப்பாளரான அபிநவ்யா, தனது திறமை மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில், ஆனந்தி என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சோஷியல் மீடியா மூலம், தாங்கள் காதலிப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இவர்கள் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, இரு வீட்டார் முன்னிலையிலும் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலானது.
அதைத் தொடர்ந்து’ கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி , சென்னையில் உள்ள மண்டபத்தில் தீபக்-அபிநவ்யாவுக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததிலிருந்து’ இருவரும் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபக்-அபிநவ்யா ஜோடிக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில்’ நடிகை அபிநவ்யா’ தனது கணவருக்கு இன்ஸ்டா மூலம் ஹேப்பி முதல் மாத அனிவர்ஸரி புட்டா என வாழ்த்தியுள்ளார். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரது போஸ்டை லைக் செய்துள்ளனர். மேலும் பல்வேறு ரசிகர்களும் சூப்பர் ஜோடி, கீயூட் கபுள் என இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“