/tamil-ie/media/media_files/uploads/2019/02/a500.jpg)
சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுனர் ராஜேஷ், இறப்பதற்கு முன்பு தன்னுடைய தற்கொலைக்கு சென்னை போலீஸ் தான் காரணம் என்று பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் அமர்ந்திருந்த பெண் பயணிகளுக்கு முன்பாக போலீசார் மோசமாக திட்டியதால் தான் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம், போலீஸ் திட்டியதற்காகவா, தனது குடும்பத்தை மறந்து, எதிர்காலத்தை மறந்து அவர் தற்கொலை செய்து கொள்வார்? தன்னை மோசமாக நடத்திய காவல்துறை அதிகாரியை சட்ட ரீதியாக சந்தித்து தண்டிக்காமல், இப்படியா விலை மதிப்பில்லாத உயிரை மாய்த்துக் கொள்வது? என்றும் சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
வாழ்க்கையில் அவமானம், துக்கம், சோதனை நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வது தான் தீர்வு என்றால், இந்நேரம் உலகமே சுடுகாடாகி இருக்க வேண்டுமே!. அதையும் மீறித் தானே, பலரும் வாழ்க்கையில் ஜெயித்து போய்க் கொண்டே இருக்கின்றனர்!. ஆனால், தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
தற்கொலை எண்ணம் குறித்தும், தற்கொலை எண்ணத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் உளச்சிகிச்சையாளர் ஜெ.கண்ணன்
தொடர்புக்கு:
ஜெ.கண்ணன் B.A. Psychology(Gen), M.Sc. Counselling & Psychotherapy
உளச்சிகிச்சையாளர்
மாணவர், பதின்பருவம் & திருமண நல ஆலோசகர்.
கைப்பேசி: 9840684885
மின்னஞ்சல்: kannan0011@rediffmail.com
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us