ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார்.
அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரம்யா, மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
ரம்யா பாண்டியன் நடிப்பில் கடைசியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிபி அல்டிமேட்டில்’ வைல்ட் கார்ட் போட்டியாளராகவும் ரம்யா கலந்து கொண்டார்.
தற்போது ரம்யா பாண்டியன், “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்க, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தை இயக்குகிறார்.
இப்போது ரம்யா பாண்டியன் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தலைநகர் ஹனோய் பகுதியில் சுற்றி பார்த்த போது எடுத்த படங்களை ரம்யா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ரம்யா பாண்டியன் கியூட் போட்டோஸ் இங்கே











“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/i