தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். பந்து வீச்சில் மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கும் அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டராக இந்திய கிரிக்கெட் அணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அஸ்வின் தனது நீண்ட கால தோழியான ப்ரீத்தி நாராயணன் என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகிரா மற்றும் ஆத்யா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ப்ரீத்தியும், அஸ்வினும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.
அஸ்வினின் மனைவி பிரீத்தி ஒருமுறை தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் தனது காதல் அனுபவம் குறித்து கூறினார்.
நானும், அஸ்வினும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அப்போதிலிருந்து ஒருவருக்கொருவர் நன்று தெரியும். அஸ்வினுக்கு என் மீது காதல் இருந்தது. அது நாங்கள் படித்த பள்ளி முழுவதும் தெரியும்
பிறகு அஸ்வின் கிரிக்கெட்டிற்காக வேறொரு பள்ளிக்கு சென்றார்.
நான் சிஎஸ்கே கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன். அவர் அப்போது 6 அடி உயரத்தில் இருந்தார். ஒரு நாள் அவர் என்னை கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் சென்றார்
அப்போது, என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை மிகவும் விரும்பினேன். அது கடந்த 10 ஆண்டுகளாக மாறவில்லை என்று கூறினார்’ பிரீத்தி கூறினார்.
இதன் இரு வீட்டாரின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதத்துடன் அஸ்வின் - ப்ரீத்தி திருமணம் நடைபெற்றது.
அஷ்வினை போலவே பிரீத்தியும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். அதில் விதவிதமாக மாடர்ன் டிரெஸ், புடவை கட்டி அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை மட்டும், 155,000 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கின்றனர்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.