கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ரேஷ்மா முரளிதரன், சென்னை NSN மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகளிர் வைஷ்ணவ் கல்லூரியில்’ பட்டப்படிப்பை முடித்தார்.
Advertisment
2016 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில், ரேஷ்மா 2வது ரன்னர் அப் ஆக தேர்வானார்.
ஃபேஸ் ஆஃப் சென்னை 2015 அழகிப் போட்டியில் பங்கேற்ற ரேஷ்மா, முதல் 10 இடங்களில் வந்தார்.
ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் ரேஷ்மா சின்னத்திரையில் அறிமுகமானார்.
பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கேரெக்டர் மூலம் சீரியல் உலகில் என்ட்ரி ஆனார் ரேஷ்மா.
அந்த சீரியலில், அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது.
தொடர்ந்து அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்தனர்.
ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர் என்பதால் அபி டெய்லர் சீரியல் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.