/tamil-ie/media/media_files/uploads/2023/02/Tamil-serial-Actresses.jpg)
Tamil serial Actresses
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களை விட, ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சீரியல் நடிகைகளின் நட்பும், அவர்களின் அன்பான அனுசரிப்பும் தான். சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், ஷபானா, நக்ஷ்த்திரா இவர்களின் நட்பையும், சேட்டைகளையும் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது.
அப்படி செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடித்த ஆர்யனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அதேபோல ரேஷ்மாவும், மதனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பிறகு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான அபி சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை தட்டிச் சென்றனர்.
சமீபத்தில் சைத்ரா, ’எங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரத்தை நாங்கள் அனுபவித்தோம்’ என்று ஷபானா, நக்ஷ்த்திரா மற்றும் ரேஷ்மா உடன் இருக்கும் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
இந்நிலையில் இப்போது ரேஷ்மா, ஷபானா உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து, அதில் பெண்களே... உங்களுக்காகச் செய்யுங்கள் ! ஒரு சுய பாதுகாப்பு மிகவும் தேவை என்று பதிவிட்டுள்ளார். அது இப்போது வைரல் ஆகி வருகிறது.
இதேபோல ஷபானாவும் என்னுடைய முதல் ஹேர் கலரிங் என்று ஒரு போட்டோவை பகிர்ந்து உள்ளார். இங்கே பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.