முடி தரையை தட்டும்... காலை வெறும் வயிற்றில் இந்தப் பொடி: சீரியல் நடிகை அக்ஷயா பகிர்ந்த 15 வருட சீக்ரெட்!

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சீரியல் நடிகை அக்ஷயா பல டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சீரியல் நடிகை அக்ஷயா பல டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
akshaya

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டும் என்பது எல்லோரின் ஆசையாக உள்ளது. அதற்காக நாம் பல எண்ணெய், சிகிச்சை என எடுத்து வருகிறோம். பொதுவாக முடி உதிர்வு என்பது நம் அன்றாட பழக்க வழக்கத்தால் ஏற்படுவது ஆகும். சிலருக்கு ஜெனட்டிக் ரீதியாக முடி வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். இன்றைய பரபரப்பான சூழலில் நாம் தினமும் மாசு, தூசு ஆகியவற்றிற்கு இடையில் நடமாடி வருகிறோம்.

Advertisment

இதுவே நம் முடியை அதிகம் வலிவிழக்க செய்கிறார். அதுமட்டுமல்லாமல், சரியான தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு ஆகியவையும் முடி உதிர்விற்கு ஒரு காரணமாக அமைகிறது. முடியை பொருத்தவரை நம் உடல் குளிர்ச்சியாக இருந்தால் முடி தன்னால் வளரும் என்று கூறுவார்கள். நம் உடல் சூடே முடி உதிர்விற்கு அதிக காரணம் என்று கூறப்படுகிறது.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கணினி அல்லது மொபைல்களிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். கணினி மற்றும் மொபைலை தொடர்ந்து பார்க்கும் பொழுது உடம்பு சூடாகுகிறது. இதனால் முடி உதிர்வு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மன அழுத்ததின் போது நாம் அதிகமாக யோசிப்போம்.  சரியான தூக்கமும் இருக்காது இதனாலும் முடி உதிர்வு ஏற்படும்.

முடி உதிர்வை கட்டுப்படுத்தி அதனை நீளமாக வளர்க்க வேண்டும் என்று ஆசை இருப்பவர்கள் முதலில் தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கையை முறையை மாற்ற வேண்டும். இந்நிலையில், முடியை எப்படி வளர்க்கலாம் என்று சீரியல் நடிகை அக்ஷயா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  ”15 வருடங்களாக முடியை வெட்டாமல் வளர்த்தேன். நான் முடிக்கு தேய்க்கும் எண்ணெய் எல்லாம் என் அம்மா தான் ரெடி செய்து கொடுப்பார். 

Advertisment
Advertisements

தேங்காய் எண்ணெய் கூட நாங்கள் வீட்டில் தான் செய்வோம். தலை முடிக்கு எண்ணெய் தேய்ப்பவது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தாது. அது நமது இரத்த ஓட்டத்தை சரிசெய்யும். நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகள் மூலமே நம் முடி வளரும். கற்றாழை ஜூஸ், வெந்தயம் போன்றவற்றை நாம் அதிகம் உண்ணும் போது அது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் காலையில் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் கறிவேப்பிலை பொடியை சாப்பிடுவதும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதை நான் 16 வருடங்களாக செய்து வருகிறேன்” என்றார்

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: