எல்லா காலநிலையிலும்’ உங்கள் சருமத்திற்கு சில கூடுதல் ஊட்டச்சத்து தேவை. ஆரோக்கியமான, மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தை அடைய நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் இதோ!
வீட்டிற்குள் இருக்கும் போதும் சன்ஸ்கீரின் அவசியம்!
வீட்டிலிருந்து நீண்ட நேரம் வேலை செய்வதால், உங்களை சூடாக வைத்திருக்க பிரகாசமான, வெயில் நிறைந்த இடத்தை நோக்கிச் செல்லலாம், ஆனால் வீட்டிற்குள் கூட’ அதிக சூரிய ஒளியில், கரும்புள்ளிகள் மற்றும் நேர்த்தியான கோடுகள் ஏற்படலாம். இது உங்கள் தோலில் இருந்து நீரேற்றத்தை உறிஞ்சி, மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கும். எனவே’ உங்கள் அன்றாட தோல் பராமரிப்பு வழக்கத்தில் எளிதாக இணைக்கக்கூடிய சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும். வீட்டிற்குள் SPF அணிவது, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக சூரியக் கதிர்கள் நுழைவதிலிருந்து’ உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்
நீரிழப்பு உங்கள் சருமத்தை சோர்வாகவும், மந்தமாகவும் ஆக்குகிறது, அதன் இயற்கையான பளபளப்பை திருடுகிறது. வெளியில் இருந்து உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது முக்கியம் என்றாலும், உங்கள் உடல் எடையைப் பொறுத்து 6-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
ஹைலூரோனிக் அசிட்-தோல் பராமரிப்பு பொருட்கள்
ஹைலூரோனிக் அசிட்’ உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் வராமலும் தடுக்கிறது மற்றும் மக்கள் பொறாமைப்படும் ஆரோக்கியமான சருமத்தை அடைய உதவுகிறது!
மென்மையான க்ளென்சரைப் பயன்படுத்தவும்
உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அகற்றாத, உங்கள் சரும வகைக்கு ஏற்ற க்ளென்சரைத் தேடுவது நல்லது. உங்கள் சருமத்தின் pH அளவை சமன் செய்து, ஹைட்ரேட் செய்து சுத்தப்படுத்தும் ஒரு க்ளென்சர் உங்கள் சருமத்துக்கு பலமடங்கு பாதுகாப்பு அளிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”