பலர் பருப்புகளை, குறிப்பாக பாதாமை உட்கொள்வதற்கு முன்பு ஊறவைப்பார்கள். ஆனால் ஏன் அப்படி என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஆயுர்வேத பயிற்சியாளர் கீதா வரா சமீபத்தில் பாதாம் போன்ற பருப்புகள் உடலுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும், எனவே சாப்பிடுவதற்கு முன் ஊறவைக்க வேண்டும் என்று விளக்கினார்.
பாதாம் தோலில் - ஜீரணிக்க கடினமாக இருக்கும் – ஆன்டி நியூட்ரியண்ட்ஸ், டானின், பைடிக் அமிலம் உள்ளது - இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கிறது மற்றும் இரத்தத்தில் பித்தத்தை மோசமாக்கும். எனவே அதை இரவில் ஊறவைத்து தோலை நீக்கி சாப்பிடுவது நல்லது என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.
பலன்கள் என்ன?
பாதாமில் அதிகளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, அவை 'கெட்ட' கொழுப்பைக் குறைக்கும். பாதாம் ஒரு புரத மூலம், இது இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த உதவுகிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளின் வளமான மூலமாகும் என்று கீதா கூறினார்.
அவை புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஒமேகா -3, ஒமேகா -6, மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் வளமான மூலமாகும்.
பாதாம் மூளை மற்றும் நரம்புகளுக்கு ஒரு நல்ல டானிக். ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றன. அவை அனைத்து உடல் திசுக்களுக்கும் ஆதரவாக உள்ளது. தசை பலவீனத்தை மேம்படுத்துகிறது. இனப்பெருக்க திசுக்களுக்கு உதவி, பாலுணர்வை ஆதரிக்கிறது.
அதன் இனிப்பு சுவை காரணமாக வாதத்தை அமைதிப்படுத்துகிறது. அதிக மாதவிடாய் காலம் போன்ற எந்த வித இரத்தப்போக்கு கோளாறுகளுக்கும் பாதாம் உதவியாக இருக்கும்.
எவ்வளவு பாதாம் பருப்புகளை உட்கொள்ள வேண்டும்?
"ஒவ்வொரு காலையிலும் இரவு முழுவதும் ஊறவைத்து, தோல் நீக்கப்பட்ட, 5-10 பாதாம் பருப்புகளை சாப்பிடுங்கள். அவை மிகவும் பல்துறை திறன் கொண்டவை, எனவே நீங்கள் அவற்றை எந்த உணவிலும் சேர்க்கலாம். குறிப்பாக, "காலை உணவின் ஒரு பகுதியாக அவற்றை வைத்திருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.