Ilamai Pudhumai Swarnamalya : தொலைக்காட்சி மெல்ல மெல்ல வீடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலத்தில், ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் என்றும் பசுமையானவை. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’ நிகழ்ச்சியையும் சொல்லலாம். இதனை நடிகை ஸ்வர்ணமால்யா தொகுத்து வழங்கினார்.
ஸ்வர்ணமால்யா
சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு, சிறு வயது முதலே நடிப்பிலும் பரதத்திலும் ஆர்வம் அதிகம். அதனால் அமெரிக்கா சென்று அங்கு சினி பள்ளியில் படித்து விட்டு சென்னை திரும்பினார். 3 வயது முதல் பரதம் கற்று வந்த ஸ்வர்ணமால்யா, 17 வயதில் பாரதத்திற்கான ’யுவ கலா பாரதி’ என்ற விருதினை பெற்றார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் ஆன் ஸ்கிரீன் பயணத்தைத் தொடங்கினார்.
ஸ்வர்ணமால்யா
பின்னர் மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினிக்கு அக்காவாக பூர்ணி என்ற பாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் தோன்றினார். அதனைத் தொடர்ந்து ”எங்கள் அண்ணா, மொழி” போன்ற படங்களில் இரண்டாம் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்தார். 2002-ல் அர்ஜுன் ராம ராஜன் என்ற அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான ஸ்வர்ணமால்யா, விரைவிலேயே சென்னை திரும்பும் நிலை ஏற்பட்டது.
ஸ்வர்ணமால்யா
ஆம், கருத்து வேறுபாட்டால் 2004-ல் அவரின் திருமணம் விவாகரத்தானது. பின்னர் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தவர், பாரதி ராஜா இயக்கிய ’தெக்கத்தி பொண்ணு’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதோடு பரத நாட்டிய பள்ளி ஆரம்பித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறார். அதோடு அதிரடியாக உடல் எடையையும் குறைத்திருக்கிறார்.