உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் மசாலா சேர்த்து செய்யப்படும் காரசாரமான சமோசாவை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டிருப்போம்.
Advertisment
ஆனால் குழந்தைகளுக்கு எப்போதுமே இனிப்பு சுவையின் மீது அலாதியான பிரியம் இருக்கும். எனவே பழங்களை கொண்டு ஆரோக்கியமாகவும் ருசியாகவும் சமோசா எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
இந்த இனிப்பு சமோசாவில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழம் சேர்த்து தயாரிக்கப்படுவதால் ருசியும் ஆரோக்கியமும் நிறைய உள்ளன.
தேவையான பொருட்கள்:
கோதுமை - ஒரு கப்
மைதா - ஒரு கப்
வாழைப்பழம் - சிறிதளவு
ஸ்ட்ராபெர்ரி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மேஷ்மெல்லோ - ஒரு கப்
சாக்லேட் - ஒரு கப்
சர்க்கரை - தேவையான அளவு
பிஸ்கட் - ஒரு கப்
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை: வாழைப்பழம், ஸ்ட்ராபெரி பழங்களை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மற்றும் மைதாவுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து அத்துடன் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும். பின் அதன் மேல் ஈரத்துணியை போட்டு 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
ஊறியபின் அந்த மாவை தேய்த்து சப்பாத்தி போல் செய்து பாதியளவு வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் அதனை ஓரங்களை வெட்டிவிட்டு, மூன்று பாகமாக வெட்டி கொள்ளவும். அதில் நறுக்கி வைத்துள்ள பழங்களை வைத்து சமோசா போல் மடித்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் மடித்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் அதன்மேல், சர்க்கரை தூவி பரிமாறுங்கள்.