Advertisment

சுகருக்கு எளிய தீர்வு எலுமிச்சை... எப்படின்னு பாருங்க!

Tamil Health Update : வறுத்த மற்றும் வேகவைத்த காய்கறிகளுடன் எலுமிச்சை சாறை சேர்த்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகருக்கு எளிய தீர்வு எலுமிச்சை... எப்படின்னு பாருங்க!

Tamil Health Update : உடல் ஆரோக்கியத்திற்கு ஆங்கில மருத்துவத்தை விட இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் அதிக பலன் தரும். குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினையாக நீரிழிவு நோய்க்கு இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை வைத்தே தீர்வு காணலாம் என்பது பலரும் அறிந்திடாத ஒன்றாக உள்ளது.

Advertisment

உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நிரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல ஆங்கில மருத்தவ முறைகள் இருந்தாலம் எளிதில் கிடைக்கக்கூடடிய இயற்கை பொருட்கள் அதைவிட சிறந்த பலனை கொடுக்கும்.இதில் முக்கியமாக நமக்கு எளிதில் மற்றும் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை நீரிழிவு நோய்க்கு பெரிய பலன் தருகிறது.  

கடுகு சிறிதானாலும் காரம் குறையாக என்பது போல எலுமிச்சை சிறிய வடிவில் இருந்தாலும் அது நமக்கு பெரிய பயனை தருகிறது. உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிக்கும்போது பெரிய பயன்தரும். அதோடு மட்டுமல்லாமல், உடல் கழிவுகளை வெளியேற்றவும், சருமம் மற்றும் கூநதல்தொடர்பான பல பிரச்சினைகளை தீர்க்க எலுமிச்சை சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகிறது.

பொதுவாக எலுமிச்சையில், வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து, என அதிகளவு வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடக்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்ச்சியுடன் இரக்க உதவுகிறது. மேலும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு தேவைப்படும் வைட்டமின் சி அளவில் பாதியை ஒரு எலுமிச்சை பழம் கொடுத்தகிடுகிறது இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்களையும், வைட்டமின் சி மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம். அதிகபட்சமாக ஒரு எலுமிச்சையில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவில் சுமார் 9.6 சதவீதத்தை அளிக்கிறது அதிக நார்ச்சத்து உள்ள உணவை உட்கொள்ளும்போது உடலில் குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளைசரைடு அளவை குறைத்து இன்சுலின் தேவையை குறைக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பாக நோய்களை தடுப்பதற்கும் இது பயன்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரமைக்க நார்ச்சத்து முக்கிய பங்கை கொடுக்கிறது.  

எலுமிச்சை பழத்தில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு  நன்மை தரும் மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் செரிமானத்திறனை சீராக வைத்திருக்க எலுமிச்சை சாறு பெரிய அளவில் உதவியாக இருக்கும். இதில் உள்ள குறைந்த கலோரியும், கொழுப்பும் சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய பலனை கொடுக்கிறது.

வீட்டில் அசைவ உணவு சமைக்கும்போது எலுமிச்சைசாற்றை பயன்படுத்தலாம். வறுத்த மற்றும் வேகவைத்த காய்கறிகளுடன் எலுமிச்சை சாறை சேர்த்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். பொதுவாக எலுமிச்சை பழத்தை அனைத்து நேரங்களிலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதனை அதிகமாக உட்கொண்டால், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாயப்பு உண்டு.

மேலும் எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை பல் எனமாலை அறிவித்தவிடும் என்பதால் எலுமிச்சை சாறை சாப்பிட்டவுடன் வாய் கொப்பளித்துவிடுவது நல்லது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் இரும்புச்சத்தை ஏற்படுத்த உதவும். மேலும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Healthy Life Lemon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment