/indian-express-tamil/media/media_files/2025/10/24/clean-lemon-2025-10-24-22-25-07.jpg)
நாம் பொதுவாக எலுமிச்சை சாறுக்காகப் பழத்தைப் பயன்படுத்திய பிறகு, அதன் தோலை குப்பையில் தான் தூக்கி எறிவோம். ஆனால், அந்தத் தோலை வீணாக்காமல் எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் (1/2 லிட்டர்) அளவுக்குத் தண்ணீர் நிரப்பி, அதை நன்றாகக் கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்து வரும் நிலையில், எலுமிச்சைத் தோல்கள் அனைத்தையும் அந்தக் கொதிக்கும் தண்ணீரில் போடவும். தீயை மிதமான அளவில் வைத்து, சுமார் ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்கு நன்றாகக் கொதிக்க விடவும். இப்படிச் செய்வதால், எலுமிச்சையின் தோலில் இருக்கக்கூடிய அனைத்துச் சத்துக்களும் அந்தத் தண்ணீரில் நன்றாகக் கலந்துவிடும்.
இப்போது, அதில் அரை டீஸ்பூன் அளவுக்குக் கல் உப்பு மற்றும் கால் டீஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பை அணைத்தல்: இதனை மேலும் இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்க விட்டு, பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடாக இருக்கக்கூடிய இந்தத் தண்ணீரிலிருந்து எலுமிச்சைத் தோலை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கவும். அதன் சூடு சற்று ஆறிய பிறகு, அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, நைஸான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த பேஸ்ட்டை வடிகட்டி, சாறை மட்டும் தனியாக எடுக்கவும். வடிகட்டிய இந்தச் சாறை, நாம் ஏற்கனவே எலுமிச்சைத் தோலைக் கொதிக்க வைத்த அந்தத் தண்ணீருடனே சேர்த்து நன்றாகக் கலக்கவும். தயாரான இந்தக் கலவையை ஒரு பாட்டிலில் எடுத்துச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு மல்டி பர்ப்பஸ் லிக்யூடாக பயன்படுத்தரலாம். நாம் சாதாரணமாகப் பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் திரவத்துடன் இந்தக் கலவையைச் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
வீட்டின் தரையைத் துடைக்கப் பயன்படுத்தலாம். சமையலறை சிங்க் அல்லது பாத்ரூம் சிங்க்கை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். இனிமேல் எலுமிச்சைத் தோலைத் தூக்கி எறியாமல், இப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us