காட்டன் சாரி டூ வெள்ளை சட்டை வரை நீட்... டிரஸ் அயன் பண்ணும் போது இந்தக் கஞ்சி போட்டுப் பாருங்க!

அயன் செய்து ஆடை உடுத்துபவர்களுக்கும் சில பிரச்னைகள் இருக்கிறது, கஞ்சி போட்டு அயன் செய்வது எப்படி, கஞ்சிக்கு எந்த மாவு பயன்படுத்தலாம், கஞ்சி போட்டு அயன் செய்தால் உடை கத்தி மாதிரி இருக்கும் என்று சொல்வார்களே அதை எப்படி செய்வது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

அயன் செய்து ஆடை உடுத்துபவர்களுக்கும் சில பிரச்னைகள் இருக்கிறது, கஞ்சி போட்டு அயன் செய்வது எப்படி, கஞ்சிக்கு எந்த மாவு பயன்படுத்தலாம், கஞ்சி போட்டு அயன் செய்தால் உடை கத்தி மாதிரி இருக்கும் என்று சொல்வார்களே அதை எப்படி செய்வது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

author-image
D. Elayaraja
New Update
Silk saree care

Silk saree care

பொதுவாக வேட்டி, சட்டை, சேலை, பேண்ட் என எதுவாக இருந்தாலும், அயன் செய்து நீட்டாக அணிய வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் சுருங்க சுருங்க சட்டை போட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். அப்படியே சுருங்கிய சட்டையை போட்டுக்கொண்டு சென்றாலும், அந்த நாள் அவர்களுக்கு சற்று மோசமான நாளாகவே அமையும்.

Advertisment

இப்படி அயன் செய்து ஆடை உடுத்துபவர்களுக்கும் சில பிரச்னைகள் இருக்கிறது, கஞ்சி போட்டு அயன் செய்வது எப்படி, கஞ்சிக்கு எந்த மாவு பயன்படுத்தலாம், கஞ்சி போட்டு அயன் செய்தால் உடை கத்தி மாதிரி இருக்கும் என்று சொல்வார்களே அதை எப்படி செய்வது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இப்படி யோசிப்பவர்களுக்கு ஒரு சிறப்பான யோசனையை இங்கு பார்ப்போம் இந்த பவுடரை பயன்படுத்தி கஞ்சி வைத்து உங்கள் உடைகளை நீட்டாக வைத்துக்கொள்ளலாம்.

கஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போமா?

ஜவ்வரிசி குருணையை பயன்படுத்தி துணிகளுக்கு கஞ்சி செய்யலாம். குறிப்பாக காட்டன் சேலைகளுக்கு இந்த முறையில் செய்யலாம். இந்த பவுடர் நைசாக இல்லாமல் சற்று குறகுறப்பாக இருக்கும். முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீரை நன்றாக சூடு செய்ய வேண்டும். கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் நன்றாக சூடானவுடன், அதில் ஜவ்வரிசி குருணை மாவை தண்ணீரில் கரைத்து சூடான தண்ணீரில் சேர்க்கவும்.

10 நிமிடங்கள் அடுப்பை ஸ்லோ ஃபிளேமில் வைத்துக்கொண்டு நன்றாக கிண்ட வேண்டும். அதன்பிறகு, ஒரு நைசான துணியை எடுத்து ஒரு பக்கெட்டில் வைத்து அந்த துணியில் கஞ்சியை ஊற்றி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடி கட்டாமல் செய்தால், துணியில் வெள்ளை வெள்ளையாக தெரியும். அதனால் கஞ்சியை சுத்தமாக வடிக்கட்டிவிட்டு, அதில் அரை பக்கெட் தண்ணீர் சேர்க்கவும். துணியில் இருக்கும் குருகைளை தண்ணீரில் நனைத்து நனைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Advertisment
Advertisements

இப்போது பக்கெட்டில் இருக்கும் கஞ்சியில் துணிகளை நன்மைத்து நன்றாக முறுக்கி தண்ணீர் போக எடுத்து காய வைக்கவும். அவ்வளவு தான் காட்டன் சேலை காய்ந்தவுடன், முறுமுறுவென இருக்கும். இதை அயன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Tamil Lifestyle Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: