தலைவலி தரும் எறும்பு கூட்டம்... தைலம் போடுறது மாதிரி இந்த மருந்து; இனி எட்டிக் கூடப் பார்க்காது!

இனிப்பு பொருட்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் எறும்புகள் குடிகொண்டிருக்கும். அது மட்டும் இல்லாமல், உணவு பொருட்களில் கூட எறும்புகள் ஏறிவிட்டால், அதை சாப்பிடுவது என்பது முடியாத வேலை.

இனிப்பு பொருட்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் எறும்புகள் குடிகொண்டிருக்கும். அது மட்டும் இல்லாமல், உணவு பொருட்களில் கூட எறும்புகள் ஏறிவிட்டால், அதை சாப்பிடுவது என்பது முடியாத வேலை.

author-image
D. Elayaraja
New Update
ant

புதிய வீடாக இருந்தாலும், பழைய வீடாக இருந்தாலும் பொதுவாக இருக்கும் முக்கிய விஷயம் பூச்சயினங்கள் தான். பொதுவாக வீடுகளில், ஈ, கொசுக்கள், பல்லிகள், எறும்புகள் இருப்பது வழக்கம் தான். ஆனாலும் இதில் எறும்புகள் செய்யும் அட்டகாசம் பெரிய அளவில் இருக்கும். இனிப்பு பொருட்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் எறும்புகள் குடிகொண்டிருக்கும். அது மட்டும் இல்லாமல், உணவு பொருட்களில் கூட எறும்புகள் ஏறிவிட்டால், அதை சாப்பிடுவது என்பது முடியாத வேலை.

Advertisment

வெயில், மழை, குளிர், என எந்த காலமாக இருந்தாலும், எறும்புகள் ராஜ்ஜியம் அதிகமாகத்தான் இருக்கும். இதை கட்டுப்படுத்த, சாக்பீஸ், எறும்பு பவுடர் என எதை வைத்து என்ன செய்தாலும், பவுடர் போட்ட இடத்தை விட்டுவிட்டு, அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்துவிடும். குறிப்பாக பெட்ரூமுக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான் தூங்கவே முடியாத அளவுக்கு எறும்புகள் இரவு முழுவதும் கடித்தே நம்மை பாடாய் படுத்திவிடும். ஆனாலும் இந்த எறும்பு கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி நடந்துகொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் எறும்பு கூட்டத்தை கட்டுப்படுத்த, தலை வலிக்கு பயன்படுத்தும் தைலமே போதும் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்ஃ பொதுவாக எறும்புகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், அனைவரும் ஒரே இடத்தை நோக்கி செல்வதற்கும், அதுக்கள் வெளியிடும் ஒரு வாசனை தான் முக்கிய காரணம். ஒரு எறும்பு தங்களுக்கு பிடித்தமான உணவை கண்டுபிடித்துவிட்டால் அங்கிருந்து ஒரு வாசனையை வெளியேற்றி மற்ற எறும்புகளையும் அங்கு வரவழைக்கும். இந்த வாசனையை வைத்தே எறும்புகளை கட்டுப்படுத்தலாம்.

நம் தலைவலிக்கு பயன்படுத்தும் தைலமான, விக்ஸ், கற்பூரம், மென்தால், யுகலிப்டஸ் போன்ற எண்ணெயில் இருந்து வரும் வாசனை ரொம்பவே கடினமானது. இவை எறும்புகள் வெளியிடும் வாசனையை முற்றிலுமாக அழித்துவிடும். இதனால் குழப்படைந்த எறும்புகள் பாதை தெரியாமல் திக்குமுக்காட வைக்கும். ஒரு இயர்பட்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் தைலத்தை தொட்டு எறும்பு வரிசை போகும் இடத்தில் தடவிவிட்டால் போதும், எறும்புகள் வீட்டுகள் வரும் தடம், அது தொடங்கும் இடத்தில் இதை தடவிவிட்டால், எறும்புகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தலாம்.

Advertisment
Advertisements
Tamil Lifestyle Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: