Advertisment

சுவையான டிபன் சாம்பார் செய்வது எப்படி? ரகசியம் சொல்லும் வெங்கடேஷ் பாட்

Tiffen Sambar Easy way Update : சுவையான டிபன் சாம்பார் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுவையான டிபன் சாம்பார் செய்வது எப்படி? ரகசியம் சொல்லும் வெங்கடேஷ் பாட்

Tamil Recipe Update : நம் தினசரி உணவில் சாம்பார் இல்லாமல் உணவு முழுமை அடையாது என்றே சொல்லலாம். சாதம், இட்லி, தோசை, என பலவகை உணவுகள் இருந்தாலும் இதற்கு முக்கிய துணை உணவாக பயன்படுத்தவதில் சாம்பாருக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. விருந்து நிகழ்ச்சிகளிலும், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும்  அளிக்கப்படும் உணவில் சாம்பார் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த சாம்பார் செய்முறை இடத்திற்கு தகுந்தார் போல் மாறுபடும். இதில் முக்கிய பொருளாக பயன்படுத்துவது பருப்புதான் என்றாலும் செய்முறைகளில் பல வித்தியாசங்கள் உள்ளது.

Advertisment

அந்த வகையில் ஒன்றுதான் டிபன் சாம்பார். இந்த டிபன் சாம்பார் வழக்கமான செய்முறைகளில் இல்லாமல் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும். வித்தியாசமான ஒரு சாம்பார் ரெசிபியை சமையல் கலைஞர் வெங்கடேஷ் பாட் செய்கிறார். எப்படி என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள் :

காஷ்மீர் மிளகாய் – 100 கிராம்

வரமிளகாய் – 100 கிராம்

கொத்தமல்லி – 200 கிராம்

சீரகம் – 100 கிராம்

மிளகு 100 கிராம்

வெந்தயம் – 100 கிராம்

துவரம்பருப்பு – 150 கிராம்

பாசிபருப்பு – 150 கிராம்

சின்ன வெங்காயம் – 200 கிராம்

முருங்கைக்காய் – 2

தக்காளி -4

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

புளி – 50 கிராம்

வெல்லம் – 50 கிராம்

கருவேப்பிலை -  சிறிதளவு

மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – 5 டீஸ்பூன்

கடுகு சிறிதளவு

பெருங்காயம் – 50 கிராம்

செய்முறை :

முதலில் காஷ்மீர் மிளகாய், வரமிளகாய், சீரகம், வெந்தயம், மிளகு கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அரைத்து பொடியாக்கி தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு துவரம்பருப்பு, பாசிபருப்பு, முருங்கைக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரை ஸ்பூன் மஞ்சள் தூளுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதன்பிறகு ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சிறிதளவு கருவேப்பிலை, நருக்கிய தக்காளி, ஆகியவற்றை சேர்ந்து வதக்கவும். அடுத்து 50 கிராம் புளியை 100 கிராம் தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை அதில் ஊற்றி, அதில் 50 கிராம் வெள்ளத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதித்தபின், தனியாக வைத்துள்ள பருப்பு கரைசலை அதில் ஊற்றவும்.  நன்றாக கலக்கியவுடன் அரைலிட்டர் தண்ணீரை ஊற்றவும்.

அதன்பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். அடுத்து வேறொரு கடாய் எடுத்து அதில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிதளவு கடுகு, பொடியாக நறுக்கிய 4 வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து கொதித்து எடுத்து வைத்துள்ள சாம்பாரில் கொத்தமல்லி இலை தூவவும். பிறகு கடாயில் வதங்கி வரும் வெங்காயத்தில் கரைத்த பெருங்காய தண்ணீரை ஊற்றவும். அடுத்து கேஸ் ஆப் செய்துவிட்டு அதில் 2 அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து இந்த வெங்கயத்தை எடுத்து தயாராகியுள்ள சாம்பாரில் கொட்டி நன்றாக கிண்டவும். அதன்பிறகு சாம்பார் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து அதில் சிறிதளவு மல்லி இலையை தூவவும். அதன்பிறகு சிறிது நேரம் மூடி வைத்து பின் எடுத்தால் அருமையான டிபன் சாம்பார் ரெடி  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Recipe Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment