Tamil Recipe Update : தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான ஒன்று அடை. தோசை மாதிரியான தோற்றம் கொண்ட இந்த அடை அதிக சத்தக்களை உள்ளடக்கியது. பல பருப்புகள் சேர்ந்து அரைத்த மாவில் செய்யப்படும் இந்த அடை பெரும்பாலும் காலை உணவாகவும், மாலையில் நொறுக்கு உணவாகவும் பல வீடுகளில் உள்ளது. மேலும் இந்த அடையில் கீரைகள் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து அதிக சத்து நிறைந்த உணவாகவும் மாற்றலாம்.
அந்த வகையில் முருங்கை கீரை அடை அதிக சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. இந்த அடை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ஒரு கப்
கடலைப்பருப்பு – அரைகப்
துவரம்பருப்பு – அரைகப்
மஞ்சள்பொடி- அரை டிஸ்பூன்
பெருங்காயம் – அரைடீஸ்பூன்
வரமிளகாய் - 5
பச்சை மிளகாய் – 2 (தேவைக்கேற்ப)
பூண்டு – தேவையான அளவு
வெங்காயம் – 2
கருவேப்பிலை – தேவையான அளவு
முருங்கை கீரை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய மூன்றையும் சுமார் 2 மணி நேரம் ஊரவைத்து, பிறகு நீரை வடிகட்டி அதனுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்தக்கொள்ளவும்.
அடுத்து வெங்காயம் பூண்டு, முருங்கை கீரை, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு அடுப்பில் தேசைக்கல்லை வைத்து காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து தேவை வடிவில் கல்லில் இடவும்.
ஒருபுறம் வேகும்போது அதில் நடுவில் ஓட்டை செய்து அதில் சிறிது எண்ணெய் விடவும். அடுத்து அடையை திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான முருங்கைகீரை அடை தயார். இந்த அடைக்கு வெல்லம், இட்லி மிளகாய்பொடி, சேர்த்து சாப்பிடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.