கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு புறாக்களை பறக்க விட்டனர்.
Advertisment
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று புறா பந்தயம் நடைபெற்றது. இதில் கோயமுத்தூர் புலியகுளம் பி.ஜி.என். பிரண்ட்ஸ் இன் சார்பில் 18"ம் ஆண்டாக ஒரு நாள் சாதா புறா பந்தயம் தொடங்கியது. இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட புறாக்களுக்கு அடையாளமாக சீல் வைக்கப்பட்டது.
இதில் 19 கூண்டுகளைச் சேர்ந்தவர்கள் 19 புறாக்களை பறக்கவிட்டனர். பறக்க விட்ட புறாக்கள் மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் அவரவர் கூண்டுகளில் அமர வேண்டும். இப்படி அமருவதின் அடிப்படையில் புறாக்களுக்கு முதல் இரண்டு மூன்று என பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“