இந்தோனேசியாவை சேர்ந்த 14 வயது சிறுவன், கடந்த இரண்டாண்டுகளில் 20 முட்டைகளை இட்டதாக கூறி, மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளான். இத்தகைய விநோத உடல் செயல்பாட்டுக்கு என்ன காரணம் என புரியாமல் மருத்துவர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.
இந்தோனேசியாவை சேர்ந்த அக்மல் தான் அந்த சிறுவன். சமீபத்தில் மருத்துவர்கள் முன்பே 2 முட்டைகளை இட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான். மனிதர்களின் உடலில் முட்டை உருவாகுதல் சாத்தியமே இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அவ்வாறு சிறுவன் இடும் முட்டைகளில், சில முழுவதுமாக மஞ்சள் கருவுடனும், சில வெள்ளை கருவை மட்டுமே கொண்டிருக்கும் எனவும் அச்சிறுவனின் தந்தை தெரிவிக்கிறார். சிறுவனை பரிசோதனை செய்ததில், அவனது மலக்குடலில், கோழியின் முட்டை அளவில் சில முட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது இதுகுறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.