வட்டாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி போன்ற படங்களின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்றார். இறுதியாக வசுந்தரா நடித்து வெளியான பக்ரீத் படம் விமர்சன ரீதியில் நல்ல பாராட்டை பெற்றது.
Advertisment
ஒருமுறை வசுந்தரா ஒரு தமிழ் இதழுக்கு அளித்த பேட்டியில், நான் எப்போதும் படங்களின் எண்ணிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. எனக்கு மனதிருப்தி உள்ள கேரெக்டரில் மட்டுமே நடிப்பேன். கமர்ஷியல் படங்களில் நடிக்க நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை. எனக்கு மீடியாவில் ஆர்வம் உண்டு. பத்திரிகையாளராக ஆசைப்பட்டேன். நான் ஆங்கில இலக்கியம் படித்ததே அதற்காகத்தான் என்று கூறினார்.
வசுந்தரா காஷ்யப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது போட்டோஷூட்களை பதிவிடுவார். அவர் புடவைக் கட்டி எடுத்த அழகான புகைப்படங்கள் இங்கே
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“