/tamil-ie/media/media_files/uploads/2017/05/vertu_signature_cobra_1495630657562.jpg)
அந்த காலத்தில் போலீஸ்காரர்கள் வைத்திருக்கும் வாக்கி டாக்கியை பார்த்துவிட்டு, நான் செல்போன் பார்த்தேன் என அதிசயத்தை கண்டது போல சிலர் கூறுவதை கண்டிருப்பீர்கள். அப்படி இருந்த காலத்தில் இருந்து தற்போது காய்லாங் கடையில் கூட பயன்படாத செல்போன்களை பார்க்க முடிகிறது. தொழிற்நுட்பம் எந்த அளவிற்கு வேகமாக முன்னேறியுள்ளது என்பதை இது காட்டுகிறது.
ஆளுக்கு ஆள் தற்போது செல்போன் வைத்துக் கொள்கின்றனர். அதிலும், சிலர் இரண்டு செல்போன்கள் என கணக்கில்லாம் அதை கையாள்கின்றனர். இப்படி செல்போன் பயன்பாட்டின் அதிகரிப்பால் அவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகே மாறிவிட்டது.
இந்நிலையில், ஆடம்பர பொருட்களை விரும்பி வாங்கும் மக்களுக்கென வெர்டு (Vertu) என்ற நிறுவனம் ரூ.2.3 கோடி விலையில் புதிய செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இந்த செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. விலையைப் பார்த்தால் கொஞ்சம் தலைசுற்றுகிறதே என நினைப்பது புரிகிறது.
இந்த போனில் பொருத்தப்பட்டுள்ள 388 விலையுயர்ந்த பாகங்கள் தான் இந்த விலை மதிப்புக்கு காரணமாம். செல்போனில் வடிவமைக்கப்பட்டுள்ள பாம்பு வடிவம் விலையுயர்ந்த 439 மாணிக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனின் ஸ்பெஷிபிகேஷன் குறித்த உறுதியான தகவல் ஏதும் இல்லை.
குறிப்பிடும் படியாக, இது லிமிடெட் வெர்ஷன், அதாவது வெர்டு நிறுவனம் உலகமும் முழுக்க 8 செல்போன்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஒரே ஒரு வெர்டு சிக்னேச்சர் கோப்ரா செல்போன் மட்டும் விற்பனைக்காக இணையதளத்தில் இருக்கிறதாம். இந்நிலையில், இந்த செல்போன் ஹெரிக்காப்டர் மூலமாக டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.