Advertisment

உடல் முழுவதும் மச்சங்கள்: ’அரக்கி’ பட்டம் முதல் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி வரை

பள்ளிப்பருவத்தில் சக மாணவிகளால் ‘அரக்கி’ எனக்கூட அழைக்கப்பட்டிருக்கிறார். இதனாலேயே, மற்றர்களிடமிருந்து விலகி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் எவிடா டெல்மாண்டோ.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடல் முழுவதும் மச்சங்கள்: ’அரக்கி’ பட்டம் முதல் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி வரை

பெண்களுக்கு தங்கள் உடலில் ஒன்றிரண்டு மச்சங்கள் இருந்தால் அது அழகு. அதை ரசிப்போம். ஆனால், உடல் முழுவதும் மச்சங்கள் இருந்தால் அது அழகு இல்லையா? அந்த மச்சங்களுக்காக 20 வயது பெண் தன் சக வயது பெண்களாலேயே கேலிக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால், அந்த கேலிகளை எல்லாம் கடந்து இப்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

Advertisment

உடல் முழுவதும் மச்சங்கள். இதுதான் மலேசியாவை சேர்ந்த எவிடா டெல்மாண்டோவின் அடையாளம். தன்னால் மாற்றியமைக்க இயலாத, அவர் பிறக்கும்போதே இயற்கையாக தன் உடல் முழுவதும் முடிகளுடன் கூடிய மச்சங்களால் சிறு வயதிலிருந்தே மற்றவர்களால் கேலிக்கும், அவமானத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.

பள்ளிப்பருவத்தில் சக மாணவிகளால் ‘அரக்கி’ எனக்கூட அழைக்கப்பட்டிருக்கிறார். இதனாலேயே, மற்றர்களிடமிருந்து விலகி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் எவிடா டெல்மாண்டோ.

ஒருமுறை அவரது ஆசிரியர் மற்ற மாணவிகளிடம் எவிட்டாவுடன் இணைந்து இருக்குமாறு கூறியுள்ளாட்ர். ஆனால், அதற்கு அந்த மாணவிகள், “நாங்கள் ஏன் அவளை இளவரசி போல் நடத்த வேண்டும்”, எனக்கூறி அவளை ஒதுக்கினர். அது எவிட்டாவை காயப்படுத்தியது. அவர்களிடம் “என்னை நீங்கள் உங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டாம்” எனக்கூறி நகர்ந்து விட்டார்.

மற்றவர்களின் அருவருப்பான பார்வையை தாங்கிக்கொள்ள இயலாமல், எவிடா டெல்மாண்டோ மச்சங்களை முற்றிலும் தன் உடலிலிருந்து நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என நினைத்தார். ஆனால், அது அவருடைய உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் கூறிய அறிவுறையை ஏற்று அந்த முடிவை கைவிட்டார்.

மெல்ல மெல்ல மற்றவர்களின் கிண்டல் பேச்சுகளிலிருந்து மீண்டு வர முயன்றார். அவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரிந்த எவிட்டாவின் தாயார் அளித்த நம்பிக்கை அவருள் படர்ந்தது.

அதன்பின், மற்றவர்களின் வசவுகளையும், கேலிகளையும் பொருட்படுத்தாமல் தமது கனவுகளை முன்னோக்கி நகர்ந்தார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்றார். கவலைகளை மறக்க பாடல்கள் பாடினார். கிதார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். இப்போது, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மலேசியா சார்பாக கலந்துகொள்ள தேர்வாகி உள்ளார். அவருடைய இன்ஸ்டகிராம் முழுவதும், சிரித்துக் கொண்டிருக்கும் எவிடா டெல்மாண்டோவின் புகைப்படங்களையும், செல்ஃபிக்களையும் காண முடிகிறது.

நமது உடலில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் அதைபற்றிய கவலைகளில் தங்கள் லட்சியங்களை துறப்பவர்கள் ஏராளம். ஆனால், தன் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி கனவை நனவாக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்ட இந்த அழகுப்பதுமை உண்மையில் பாராட்டுக்குரியவர்தான்.

எல்லோருக்குள்ளும் ஒரு சிறப்பு இருக்கிறது. அதைக்கண்டறிந்து நாம் யார் என்பதை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் எவிடா டெல்மாண்டோவின் வெற்றி நமக்கு சொல்கிறது.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றிபெற எவிட்டாவிற்கு நாம் அவருக்கு வாழ்த்து சொல்லுவோம்.

Malaysia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment