Advertisment

நைட் ஷிஃப்ட்டில் பணிபுரியும் பெண்களா நீங்கள்? மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

இரவு நேர பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
நைட் ஷிஃப்ட்டில் பணிபுரியும் பெண்களா நீங்கள்? மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

Woman with a pink breast cancer awareness ribbon

இரவு நேரங்களில் வெளியிடங்களில் அதிக வெளிச்சத்தில் தங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஹார்வர்ட்டில் உள்ள பொது சுகாதார பள்ளியில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குரைந்த வெளிச்சத்தில் வாழும் பெண்கள் மார்பக புற்றுய்நோய் தாக்குதலுக்கு உள்ளாவது குறைவு எனவும் அந்த ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக, இரவு நேர பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

Advertisment

”இரவு நேரங்களில் செயற்கை வெளிச்சத்தை அதிகமாக பெண்கள் உணரும்போது, அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது”, என ஆராய்ச்சியாளர் பீட்டர் ஜேம்ஸ் கூறுகிறார்.

இரவு நேரங்களில் அதிகப்படியான வெளிச்சத்தை உணரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 14 சதவீதம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்த வெளிச்சத்தில் தங்குபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அந்த ஆய்வு கூறுகிறது.

மெனோபாஸ் காலத்தை எதிர்நோக்கியுள்ள பெண்கள், புகைப்பிடிக்கும் பெண்கள், புகைப்பிடிப்பதை நிறுத்திய பெண்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், அதிக வெளிச்சம் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான இந்த தொடர்பு தெரியவந்துள்ளது. குறிப்பாக, இரவு நேர பணிகளில் ஈடுபடும் பெண்கள், அதிகப்படியான செயற்கை வெளிச்சத்தை உணர்கின்றனர். இதனால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment