பெத்து வைத்தார்கள் ஒத்தையாய்
கத்தை கத்தையாய் ஆசைகள்
வித்தைகள் செய்ய..
மத்தாப்புப் பார்வைகளில்
ஒத்தடம் கொடுத்தும்
பத்தவில்லை..
பத்து விரல்களும்
வெட்கப்பட்டு தற்கொலை
செய்தன
இன்னும் உன் மேனியை வருடாததால்..
கத்திரி வெயிலில்
நித்திரை கேட்டது
கனவிலாவது முகம் காண..
உத்தமனாய் நடக்க
மனமில்லை
வித்தகனுக்கு..
தத்தை அழகைப்
பார்த்தும் எப்படி
இருப்பது புத்தனாய்?
இந்த சித்து விளையாட்டு
இன்னும் எத்தனை நாளைக்கு?