டெல்லியில் நேற்று இரவு காலமான முன்னாள் வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த நரேந்திர மோடி கண்ணீருடன் காணப்பட்டார். சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌஷால் மற்றும் மகள் பன்சூரி ஆகியோரை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டார்.
பொதுவாக வெளி இடங்களில் உணர்ச்சி முகங்களை வெள்ளிக்காட்டாத நரேந்திர மோடி தனது அமைச்சரைவியில் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராய் இருந்த சுஷ்மா ஸ்வராஜ் மரணத்தில் தடுமாற்றம் கண்டுள்ளார். இந்த செய்தி அவருக்கு தாங்க முடியாத மன வேதனையைத் தந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.