பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
கோவையில் மாநில அளவிலான இரண்டு நாள் கராத்தே தொடர்பான கருத்தரங்கம் மற்றும் தலைமை பயிற்சியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தின் 64வது கராத்தே தேர்வு மற்றும் கராத்தே தொடர்பாக நடைபெற்றது.
இதில் பயிற்சி முடித்த வீரர்,வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மேலும் கராத்தே பயில்வதால் உடல் மற்றும் மன உறுதி வலிமை பெறுவதாகவும்,மேலும் தற்போது ஒலிம்பிக்கில் கராத்தே இடம்பெற்றுள்ள நிலையில் புதிய உத்திகளை கராத்தே வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என இந்திய கராத்தே அமைப்பின் இணைச் செயலாளர் ஹன்சி கல்பேஸ் மக்வானா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil