Advertisment

வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடுவேன்: அதிர்ச்சி தரும் ஸ்ரீசாந்த்!

இந்திய கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன். நான் வேறு அணியில் விளையாடுவதை பிசிசிஐ தடுக்க முடியாது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
வெளிநாட்டு அணியில் ஸ்ரீசாந்த்

வெளிநாட்டு அணியில் ஸ்ரீசாந்த்

துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீசாந்த், ‘‘இந்திய கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன்" என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்திய அணியிக் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. ராஜஸ்தான் அணியில் இருந்த போது சூதாட்டப்புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அறிவித்தது.

இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்திற்கு எதிராக குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என கூறி அவரை விடுதலை செய்தது. எனினும், பிசிசிஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

பிசிசிஐ-யின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீசார் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணை செய்த நீதிபதி முகமது முஸ்டாக், ஸ்ரீசாந்த் மீதான பிசிசிஐ-பின் தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.

இதன் காரணமாக 34-வயதான ஸ்ரீதான் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பிசிசிஐ-யின் தரப்பில், கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பென்ஞ்-ல் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாந்த் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.

இந்த விசாரணையின் முடிவில், பிசிசிஐ விதித்த ஆயுட்கால தடை தொடரும் என உத்தரவிட்டது. இதனால், அவர் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீசாந்த் ட்விட்டரில், "கேரள உயர் நீதிமன்றத்தில் முடிவு என்பது மோசமானது. எனக்கு மட்டும் தனி சட்டமா? உண்மையான குற்றவாளிகளை தண்டிப்பது யார்? சூதாட்டத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எந்த வகையில் தடை நீங்கியது?" என்று நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கிடையே பேசிய ஸ்ரீசாந்த் ‘‘இந்திய கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனமாகும். அதனால் நான் வேறு அணியில் விளையாடுவதை அதனால் தடுக்க முடியாது. ஐசிசி என் மீது தடை விதிக்கவில்லை.

இந்திய அணியில் மட்டுமே விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது ரஞ்சி கோப்பையில் கேரளா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. கேரளா அணி ரஞ்சி டிராபி, இரானி கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன். ஆனால், இதுவெல்லாம் பிசிசிஐ கையில் உள்ளது’’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Bcci Kohli Sreesanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment