அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட முதல் ஆட்டத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 2 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்ற இந்தியா, 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்தியா - அயர்லாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்று (புதன்கிழமை) நடக்க உள்ளது.
7.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட இந்த போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil