Advertisment

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் உள்பட 9 போட்டிகளின் தேதி மாற்றம்; உலக கோப்பை மறு அட்டவணை

இந்தியா – பாகிஸ்தான் போட்டி நவராத்திரிக்கு ஒரு நாள் முன்னதாக மாற்றம்; பாகிஸ்தான் – இங்கிலாந்து போட்டி காளி பூஜைக்காக மாற்றம்; உலகக் கோப்பை மறு அட்டவணை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs Pak cricket

இந்தியா – பாகிஸ்தான் போட்டி நவராத்திரிக்கு ஒரு நாள் முன்னதாக மாற்றம்

2023 ஒருநாள் (ODI) உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டு 43 நாட்களுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதன்கிழமை ஒரு திருத்தப்பட்ட அட்டவணையை அறிவித்தது, இதில் ஒன்பது ஆட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

Advertisment

நவராத்திரி மற்றும் காளி பூஜை திருவிழாக்கள் இரண்டு போட்டிகளில் மாற்றங்களைத் தூண்டியுள்ளன, அதே நேரத்தில் பிற போட்டிகள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இளம் வீரர் திலக் வர்மா அரை சதத்தை தட்டிப் பறித்த பாண்டியா: கேப்டன் செய்தது சரியா?

இந்த திருத்தப்பட்ட அட்டவணையில் மிக முக்கியமானது அகமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் விளையாடும் போட்டியாகும், இது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு என ஒரு நாள் முன்னோக்கி கொண்டு வரப்பட்டது. அசல் தேதி குஜராத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் நாளுடன் ஒத்துப்போனது. பெங்களூருவில் நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் ஆட்டம் இப்போது நவம்பர் 12 அன்று நடைபெறும், இது நாக் அவுட் ஆட்டங்களுக்கு முன் கடைசி ரவுண்ட் ராபின் போட்டியாக இருக்கும்.

அக்டோபர் 15-ம் தேதி டெல்லியில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் ஆட்டம் நடக்கிறது. ஹைதராபாத்தில் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் ஆட்டம் அசல் அட்டவணையில் இருந்ததை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாக அக்டோபர் 10 அன்று நடைபெறும், மேலும் இலங்கை அணியை எதிர்கொள்ளும் முன் பாகிஸ்தானுக்கு கூடுதல் நாள் வழங்கப்படும். அன்று காலை தர்மசாலாவில் தொடங்கும் இங்கிலாந்து- வங்காளதேச ஆட்டத்திற்குப் பிறகு பகல்-இரவு ஆட்டமாக இந்தப் போட்டி இருக்கும். அன்று இரண்டு போட்டிகள் நடைபெறும். இங்கிலாந்து- வங்காளதேச ஆட்டம் முன்பு பகல்-இரவு போட்டியாக இருந்தது. லக்னோவில் நடைபெறும் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் ஆட்டம் இப்போது அக்டோபர் 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சென்னையில் நடைபெறும் நியூசிலாந்து- வங்காளதேசம் போட்டி ஆகும். இது முன்பு அக்டோபர் 14 அன்று பகல் ஆட்டமாக ஒதுக்கப்பட்டது, ஆனால் இப்போது அக்டோபர் 13 அன்று பகல்-இரவு போட்டியாக இருக்கும்.

கொல்கத்தாவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் ஆட்டம், நவம்பர் 12 ஆம் தேதிக்கு குறிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாகவே விளையாடப்படும், ஏனெனில் காளி பூஜையுடன் ஒத்துப்போகும் தேதி குறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. புனேவில் ஆஸ்திரேலியா- வங்காளதேசம் இடையேயான ஆட்டம் நவம்பர் 11 காலை தொடங்கும், எனவே அன்று இரண்டு போட்டிகள் நடைபெறும்.

இதன் விளைவாக, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு தலா மூன்று ஆட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா இரண்டு ஆட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2015 இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும், 2019 இல் இங்கிலாந்திலும் நடந்த முந்தைய இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகளுக்கான இறுதி அட்டவணை, ஒரு வருடத்திற்கு முன்பே இறுதி செய்யப்பட்டது, இதனால் ரசிகர்கள் போட்டியை காண்பது, தங்குமிட ஏற்பாடுகளை எளிதாக செய்துக் கொண்டனர். புதன்கிழமை, போட்டி தொடங்க 57 நாட்கள் உள்ளன.

டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை

டிக்கெட் விற்பனையின் ஆரம்பம் உலகக் கோப்பை அட்டவணையை இறுதி செய்யும் வரை காத்திருந்தது, ஆனால் ரசிகர்கள் அவற்றை வாங்குவதற்கு முன்பு இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

தொடங்குவதற்கு, அவர்கள் ஆகஸ்ட் 15 முதல் ஒரு குறிப்பிட்ட போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு தங்கள் ஆர்வத்தை பதிவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு முதலில் டிக்கெட் செய்திகளை வழங்கும் மற்றும் உலகக் கோப்பையில் தங்கள் இடத்தைப் பாதுகாக்க உதவும் என்று ஐ.சி.சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இந்தியா அல்லாத போட்டிகளின் டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 25 முதல் விற்பனைக்கு வரும். கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்தியாவின் வார்ம்-அப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 30 முதல் கிடைக்கும், முக்கிய நிகழ்வில் இந்தியாவின் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கட்டங்களாக தொடங்கும். மாறாக, இந்தியா அல்லாத அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் ஒரே நேரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.

போட்டியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரவுண்ட் ராபின் போட்டியான இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3 ஆம் தேதி கடைசியாக விற்பனைக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிக்கான டிக்கெட்டுகள் மற்றும் இறுதியானது செப்டம்பர் 15 முதல் கிடைக்கும்.

முன்பதிவு அட்டவணை:

ஆகஸ்ட் 25: இந்தியா அல்லாத பயிற்சி ஆட்டங்கள், இந்தியா அல்லாத அனைத்து லீக் கேம்களுக்கும் டிக்கெட் விற்பனை

ஆகஸ்ட் 30: கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்திய பயிற்சி ஆட்டங்கள்

ஆகஸ்ட் 31: இந்தியா - ஆஸ்திரேலியா (சென்னை), இந்தியா - ஆஃப்கானிஸ்தான் (டெல்லி), இந்தியா - வங்கதேசம் (புனே)

செப்டம்பர் 1: இந்தியா - நியூசிலாந்து (தர்மசாலா), இந்தியா -இங்கிலாந்து (லக்னோ), இந்தியா- ஸ்ரீலங்கா (மும்பை)

செப்டம்பர் 2: இந்தியா - நெதர்லாந்து (பெங்களூரு), இந்தியா - தென்னாப்பிரிக்கா (கொல்கத்தா)

செப்டம்பர் 3: இந்தியா - பாகிஸ்தான் (அகமதாபாத்)

செப்டம்பர் 15: அரையிறுதி மற்றும் இறுதி

உலகக் கோப்பை டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி

படி 1: ஆகஸ்ட் 15 முதல், https://www.cricketworldcup.com/register இல் விருப்பமான கேமுக்கான டிக்கெட்டை வாங்குவதற்கான உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்.

படி 2: நியமிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில், ரசிகர்கள் உள்நுழைந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

படி 3: போட்டி நடக்கும் நகரத்தில் உள்ள நியமிக்கப்பட்ட சேகரிப்பு மையங்களில் இருந்து நேரடியாக டிக்கெட்டுகளை எடுக்கலாம். கூடுதல் செலவில், அவை கூரியர் மூலம் கூட அனுப்பப்படலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Cricket Worldcup Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment