scorecardresearch

54 பந்தில் 1 ரன் எடுத்த புஜாரா! காரணம் யார் தெரியுமா?

மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த புஜாரா, தனது முதல் ரன்னை 54-வது பந்தில் தான் எடுத்தார்

54 பந்தில் 1 ரன் எடுத்த புஜாரா! காரணம் யார் தெரியுமா?

ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று தொடங்கி நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த புஜாரா, தனது முதல் ரன்னை 54-வது பந்தில் தான் எடுத்தார். ஒருகட்டத்தில், தென்னாப்பிரிக்க பவுலர்கள் வெறுத்தே போயினர். அடுத்த டிராவிட் என்று கூறுவதை, இன்று மெய்ப்பித்திருக்கிறார் புஜாரா.

இந்திய அணியின் தலைமை கோச்சாக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவர் இதே ஜோகன்ஸ்பெர்க் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 1992-1993ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில், தொடர்ந்து 68 பந்துகளில் ரன்களே எடுக்கவில்லை. ஆனால், அது அவரது முதல் ரன் இல்லை. 9 ரன்கள் எடுத்திருந்த பிறகு, தொடர்ச்சியாக 68 பந்துகளை அவர் அடிக்காமல் விட்டார்.

இப்போட்டிக்கான லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: India vs sa 3rd test pujara scored his first run from 54th ball

Best of Express