இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியல் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகியுள்ள கேப்டன் டு பிளசிஸ்க்கு பதிலாக எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று வீரராக காயா சோன்டோ சேர்க்கப்பட்டுள்ளார். பெலுக்வாயோவிற்கு பதிலாக ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்போட்டியின் முழு லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டு களிக்கலாம். ஆறு போட்டிகள் இந்த ஒருநாள் தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.