Advertisment

168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

மூன்று போட்டிகளில் ஏற்கனவே வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நான்காவது போட்டியிலும் வெற்றி காணும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

இலங்கை இந்தியா இடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

5 போட்டிகள் கொண்ட ஒருநாள்போட்டித்தொடரில் ஏற்கெனவே தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்துள்ளது. டெஸ்ட் தொடரை ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்தது. இந்த நிலையில், 5-வது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும், இந்திய அணி வெற்றிபெற்று ஒருநாள் போட்டியிலும், இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

37 ஓவர்கள் முடிந்த நிலையில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும்படி 70 ரன்களை எட்டியிருந்தார். ஆனால் அடுத்த ஓவரில் அவரும் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். 38 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களில் இலங்கை தத்தளித்தது.

மூன்று விக்கெட் இழப்பு: இலங்கை அணி மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில், 53 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 14 ரன்களுடனும், திரிமனே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை பேட்டிங்: 376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி 2.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு 376 ரன்கள் இலக்கு: இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோஹ்லி 131 ரன்களும், ரோஹித் ஷர்மா 104 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இலங்கை அணிக்கு 376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கவுள்ளது.

50 ஓவர்கள் முடிவில்: இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. மனீஷ் பாண்டே 50 ரன்களும், தோனி 49 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

40 ஓவர் முடிவில்: 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 284 ரன்கள் எடுத்துள்ளது. தோனி மூன்று ரன்களுடனும், மனீஷ் பாண்டே எட்டு ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

லோகேஷ் ராகுல் அவுட்: எட்டு பந்துகளில் ஏழு ரன்கள் அடித்து அவுட்டானார். மனீஷ் பாண்டே, தோனி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ரோஹித் ஷர்மா அவுட்: அணியின் ஸ்கோர் 262-ஆக இருந்த போது மேத்யூஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இவர், 88 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள், அடித்து 104 ரன்கள் எடுத்திருந்தார்.

ஹர்திக் பாண்டியா அவுட்: 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த போது, மேத்யூஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இதையடுத்து, லோகேஷ் ராகுல் களமிறங்கியுள்ளார்.

ரோஹித் 100: 86 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள், அடித்து 104 ரன்களுடன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். இது ஒரு நாள் போட்டிகளில் இவர் அடிக்கும் 13-வது சதம்.

30 ஓவர் முடிவில்: இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் ரோஹித் ஷர்மா 90 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுடனும் உள்ளனர்.

விராட் கோஹ்லி அவுட்: 96 பந்துகளுக்கு 131 ரன்கள் எடுத்த நிலையில், விராட் கோஹ்லி, லசித் மலிங்கா பந்து வீச்சில் அவுட்டானார்.

விராட் 100: கேப்டன் விராட் கோஹ்லி, 16 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 89 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

20 ஓவர் முடிவில்: இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கேப்டன் விராட் ஹோஹ்லி 89 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஒரு விக்கெட் இழப்பு: தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான், ஆறு பந்துகளுக்கு நான்கு ரன்கள் எடுத்தபோது அவுட்டானார்.

தொடக்க ஆட்டக்காரர்கள்: தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

டாஸ் வென்றது இந்திய அணி: இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

Virat Kohli India Vs Srilanka Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment