/tamil-ie/media/media_files/uploads/2017/11/z822.jpg)
இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், அடிக்கடி ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தட்டுத் தடுமாறி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டும் எடுத்தது.
அதிகபட்சமாக புஜாரா 52 ரன்கள் எடுத்தார். விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள்.
இலங்கை தரப்பில், சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட, 7 ரன்கள் மட்டுமே குறைவாகும்.
திரிமன்னே 51 ரன்களும், மேத்யூஸ் 52 ரன்களும் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி 45.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்த போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் சண்டிமல் 13 ரன்னுடனும், டிக்வெல்லா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தற்போது வரை இலங்கை 7 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தின்போது இலங்கை அணி இந்தியாவை விட கூடுதலா 150 ரன்கள் எடுத்தால் இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.