Advertisment

கடந்த முறை மானத்தை காப்பாற்றிய இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ் தலைவாஸ்: பவன் ஷெராவத் கழற்றி விடப்பட்ட பின்னணி

பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடி கொடுத்து எடுத்தது. இது பி.கே.எல் தொடரில் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக அவரை மாற்றியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PKL 10 Auction: Tamil Thalaivas released Pawan Sehrawat; reason behind in tamil

முந்தை சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் ரைடர் நரேந்தர், ஹிமான்ஷஸ் எம் அபிஷேக், மொஹிர் மற்றும் இளம் ஸ்டாண்ட்-இன் கேப்டன் சாகர் ஆகியோரை தமிழ் தலைவாஸ் அணி தக்கவைத்துள்ளது.

PKL 10 Auction - Tamil Thalaivas - Pawan Sehrawat Tamil News: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றி விடப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளன.

Advertisment

இந்த நிலையில், 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்ற நட்சத்திர வீரரான பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி கழற்றி விட்டுள்ளது. இதேபோல், மற்ற அணிகளும் சில நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ளன.

பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடி கொடுத்து எடுத்தது. இது பி.கே.எல் தொடரில் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக அவரை மாற்றியது. ஆனால், அவர் களமிறங்கிய முதல் ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் படுகாயம் அடைந்து வெளியேறினார். அறுவை சிகிச்சை காரணமாக அவர் தொடரில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அவர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இல்லாத தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் அஷன் குமார் கீழ் வெற்றி நடைபோட்டது. மேலும் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்தது.

publive-image

தற்போது அதேபோன்ற ஒரு அணியை கட்டமைக்க தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால், பவனை அதிக விலை கொடுத்து தக்க வைக்க இயலாது. அவருக்கு செலவழிக்கும் தொகையை அனுபவம் மற்றும் இளம் வீரர்களுக்கு செலவு செய்து இன்னும் வலுவான அணியை சீரமைக்க முடிவு செய்துள்ளது. அதனால், பவனை அவர்கள் அணியில் இருந்து கழற்றி விட்டுள்ளனர்.

முந்தை சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் ரைடர் நரேந்தர், ஹிமான்ஷஸ் எம் அபிஷேக், மொஹிர் மற்றும் இளம் ஸ்டாண்ட்-இன் கேப்டன் சாகர் ஆகியோரை தமிழ் தலைவாஸ் அணி தக்கவைத்துள்ளது. இதேபோல், அணியை கம்பேக் கொடுக்க வைத்த பயிற்சியாளர் அஷான் குமாரின் சேவையையும் அணி தக்க வைத்துள்ளது. குறைந்தபட்சமாக அவர் 2025 வரை அணியை வழிநடத்துவார்.

இதேபோல், டூ-ஆர்-டை ரெய்டு நிபுணரான அஜிங்க்யா பவாரையும் அணி தக்கவைத்துள்ளது. அவரது சிறப்பான ஆட்டமும், கேப்டனாக அணியை வழிநடத்திய விதமும் அனைவரையும் ஈர்த்தது. குறிப்பாக சாகர் காயம் அடைந்த பிறகு, அணியை தனது தோளில் சுமந்து வழிநடத்தி இருந்தார்.

தமிழ் தலைவாஸ் - பிகேஎல் சீசன் 10க்காக தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

எலைட் வீரர்கள்: அஜிங்க்யா பவார்

தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்கள்: சாகர், ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ்

தக்க வைக்கப்பட்ட புதிய இளம் வீரர்கள்: நரேந்தர், ஹிமான்ஷு, ஜதின்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment