Advertisment

உலகக் கோப்பையில் ரன்னர்… பிரக்ஞானந்தாவின் அடுத்த நகர்வு என்ன?

ஃபிடே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Praggnanandhaa’s next step Candidates Tournament in tamil

கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் என்பது 8 வீரர்கள் பங்கேற்கும் போட்டியாகும். இது உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான சவாலை தீர்மானிக்க நடத்தப்படுகிறது.

இந்தியாவின் 18 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா இந்த வார தொடக்கத்தில் ஃபிடே (FIDE) உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார். அவர் டைபிரேக்கர்களில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனிடம் இறுதிப் போட்டியில் தோற்றிருக்கலாம். ஆனால் இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய போட்டியில் அவரது சிறந்த ஆட்டமாகும்.

Advertisment

இந்தியாவின் 'பொற்காலம்' செஸ் பிரமாண்டங்களுக்கான திருப்புமுனை போட்டியாகவும் இது இருந்தது, அவர்களில் 4 பேர் காலிறுதிக்கு முன்னேறினர்.

உலகக் கோப்பையை வெல்வது பிரக்ஞானந்தாவுக்கு ஒரு பரபரப்பான முடிவாக இருந்திருக்கும், ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம், ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு வேறு எந்த இந்தியரும் செய்யாததை அவர் செய்துள்ளார். மேலும், 2024 ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியில் தனக்கான ஒரு இடத்தையும் பிடித்துள்ளார்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை போட்டியானது செஸ் வீரர்களுக்கான மிக உயர்ந்த போட்டியாகத் தோன்றலாம். ஆனால் ஃபிடே நடந்தும் இந்த உலகக் கோப்பையானது உலக செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் கேண்டிடேட்ஸ் போட்டிக்குக் கீழே 3வது சிறந்த போட்டியாகும்.

கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் என்றால் என்ன?

கேண்டிடேட்ஸ் டோர்னமென்ட் என்பது 8 வீரர்கள் பங்கேற்கும் போட்டியாகும். இது உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான சவாலை தீர்மானிக்க நடத்தப்படுகிறது. இது 2வது சிறந்த செஸ் போட்டியாகும். மேலும் வைல்டு கார்டுகளோ அல்லது அழைப்பிதழ்களோ வழங்கப்படாமல், இந்த நிகழ்விற்கு வீரர்கள் தகுதி பெற வேண்டும். இதுவரை 2024 போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீரராக பிரக்ஞானந்தா உள்ளார்.

ஃபார்மெட் என்ன, எப்போது நடைபெறும்?

2013 முதல் இந்த இரட்டை சுற்று-ராபின் வடிவத்தில் நடத்தப்பட்டன. இது ஏப்ரல் 2 முதல் 25 வரை கனடாவின் டொராண்டோவில் நடைபெற உள்ளது.

தற்போதைய உலக சாம்பியன் யார்?

டிங் லிரன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஸ்தானாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வென்ற முதல் சீன கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் தனது ரஷ்ய சேலஞ்சர் இயன் நெபோம்னியாச்சியை டைபிரேக்கர்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கார்ல்சன் உலகின் நம்பர் 1 இல்லையா?

5 முறை பட்டத்தை வென்ற பிறகு, இந்த ஆண்டு தனது பட்டத்தை தக்க வைக்க வேண்டாம் என்று நோர்வேவின் கார்ல்சன் முடிவு செய்தார். மேலும் எதிர்கால போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றும் கூறினார். "ஒரு விளையாட்டுக்குத் தேவையான பெரிய அளவிலான தயாரிப்புகளின் காரணமாக கிளாசிக்கல் செஸ் விளையாடுவதற்கான உந்துதல் எனக்கு இல்லை" என்று கூறிய கார்ல்சன், ஃபிடே உலகக் கோப்பையின் அரையிறுதியை எட்டியதால் 2024 போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஆனால் "கேண்டிடேட்ஸ் போட்டிகளில் பங்கேற்பேன்" என்று கூறினார். அவரது இடம் உலகக் கோப்பையில் 4வது இடத்தைப் பிடித்த அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுக்குச் செல்லும்.

கேண்டிடேட்ஸ் போட்டிக்கு பிரக்ஞானந்தா எவ்வாறு தயாராகிறார்?

கேண்டிடேட்ஸ் போட்டிக்கு இன்னும் 7 மாதங்கள் இருந்தாலும், பிரக்ஞானந்தாவின் கவனம் சந்தேகத்திற்கு இடமின்றி இப்போட்டி மீது இருக்கும். அவரது பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், அவர் சிறந்து விளங்க பல்வேறு நுட்பங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். உண்மையில் காய்களை நகர்த்தாமல் அசைவுகளைச் சொல்லி விளையாடுகிறார்.

2016 ஆம் ஆண்டு 10 வயதில் உலகின் இளைய சர்வதேச மாஸ்டர் ஆனதில் இருந்து, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட வேண்டும் என்பது அவரது கனவு. அவர் 2018ல் 12 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனபோது, ​​​​அந்த நேரத்தில் இரண்டாவது இளம் வீரர் என்கிற பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா. அவர் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்தின் வாரிசாகப் பாராட்டப்பட்டார் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

பிரக்ஞானந்தாவுக்கு இது தெரியும். மேலும் கோட்பாட்டு இறுதி கேம்களில் சிறந்து விளங்குவது போன்ற அவரது சில அம்சங்களை மாஸ்டர் செய்ய மற்ற சர்வதேச பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார். அவர் உலகின் நம்பர் 2 ஹிகாரு நகமுரா மற்றும் உலகின் நம்பர் 3 ஃபேபியானோ கருவானா ஆகியோரை உலகக் கோப்பையில் தோற்கடித்திருக்கலாம். எனினும், அவர் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு நன்கு தயாராக வேண்டும்.

அவர் ஏதேனும் போட்டிகளில் விளையாடுவாரா?

உலகத் தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள பிரக்ஞானந்தா தனது மதிப்பீட்டை மேம்படுத்த பல சிறந்த நிகழ்வுகளை விளையாட விரும்புவார். உலக ரேபிட் டீம் சாம்பியன்ஷிப் 2023ல் போட்டியிட அவர் ஏற்கனவே ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரை அடைந்துவிட்டார். அடுத்த மாதம் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியிலும் அவர் போட்டியிடுவார்.

அவரது சக தோழரும் நண்பருமான குகேஷ் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து, உலகத் தரவரிசையில் ஆனந்தை முந்தியதால், பிரக்ஞானந்தா மிகவும் பின்தங்கியிருப்பதை விரும்ப மாட்டார். ஏற்கனவே கேண்டிடேட்ஸ் போட்டிக்கு இடம் கிடைத்துள்ளதால், அவர் இப்போது தகுதிச் சுமை இல்லாமல் விளையாட முடியும்.

மற்ற இந்தியர்கள் கேண்டிடேட்ஸ் போட்டியில் சேர முடியுமா?

ஃபிடே அளவுகோல்களின்படி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் சுவிஸ் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் தகுதி பெறுவார்கள். ஒரு இடம் 2023 ஃபிடே சர்க்யூட்டின் வெற்றியாளருக்கானது, மற்றொன்று ஜனவரி 2024ல் அதிக மதிப்பீட்டைப் பெற்ற வீரருக்கானது. கடைசி சவாலாக இருப்பதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டியில் நெபோம்னியாச்சி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி மற்றும் விதித் குஜ்ராத்தி போன்ற இந்திய இளம் வீரர்களுக்கு, கிராண்ட் சுவிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதே சிறந்த வழியாகும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chess Sports International Chess Fedration Pragnanandha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment