பாரிஸில் உள்ள களிமண் மைதானத்தில் ரஃபேல் நடால் செய்த 'பிரெஞ்சு ஓபன்' சாதனையை விட, சர்வதேச அரங்கில் நடந்த பெரிய போட்டிகளில் அவர் அதிக சாதனை படைத்தவர் என வாதிடுவது கடினம்.
14 பிரெஞ்சு ஓபன் பட்டங்கள், 112 வெற்றிகள், 4 தோல்விகள் (96.55%) என அந்த களிமண் மைதானத்தில் ரஃபேல் நடால் வெற்றி வாகை சூடிய மன்னனாக வலம் வருகிறார். அவரது சாதனைகளின் பட்டியல்கள் வியக்கத்தக்கவையாக இருந்தாலும், அவை பாரிஸின் சிவப்பு நிற மண்ணில் விளையாடுவதை நடால் எப்படி தனக்கானதாக மாற்றினார் என்பதை சுருக்கமாக சொல்கின்றன.
ஒரு காலத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி என்றாலே, பெரும்பாலும் பணக்கார வர்க்கத்தினர் களமாடும் மைதானமாக பார்க்கப்பட்ட அந்த புல்வெளி மைதானத்தில், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து சென்ற ரஃபேல் நடால் தனது வெற்றிக் கொடியை நாட்டினார். அந்த களத்தில் அவர் களமாடும் ஒவ்வொரு முறையும் ஒருவித கவர்ச்சியையும், வரலாற்றின் உயர்ந்த உணர்வையும் கொடுத்தார்.
ஆடவர் ஓபன் டென்னிஸ் வரலாற்றில், ஐந்து வீரர்கள் மட்டுமே 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். இது நடால் களிமண் மைதானத்திற்கு வெளியே வெற்றி பெற்ற பட்டங்கள் ஆகும். 5 வீரர்களில் நோவக் ஜோகோவிச் மட்டுமே அனைத்து ஆடுகளங்களிலும் நடாலை மிஞ்சும் ஒரே வீரராக இருக்கிறார். அவர்கள் இருவரும் நான்கு போட்டிகளில் தலா இரண்டு பட்டங்களையாவது வென்றுள்ளனர். ஜோகோவிச் மூன்று பட்டங்களை வென்றுள்ளார்.
ரஃபேல் நடால் வென்ற இரண்டு பெரிய வெற்றிகளில், 2008 இல் விம்பிள்டனில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்துவதற்கு மழையால் குறைக்கப்பட்ட ஐந்து செட் வெற்றி எப்போதும் மிகச்சிறந்த டென்னிஸ் போட்டி என்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று, காயத்திற்குப் பிறகு 2022 இல் மீண்டும் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதாகும். இந்த இரண்டு போட்டிகளும் களிமண் அல்லாத ஆடுகளம் ஆகும்.
இந்த பெரிய போட்டிகளை வெல்வதற்கான கடினமான பார்க்கப்பட்ட அந்த நேரத்தில் அவர் இந்த சாதனையைப் படைத்தார். குறிப்பாக அவரது பரம போட்டியாளர்களாக இருந்த இரண்டு சிறந்த வீரர்களின் மாறுபட்ட பாணிகளுக்கு இடையில் தனது வெற்றிக் கனியை பறித்து இருந்தார். அவர்கள் இருவரும் அவரை தங்களின் சிறந்த போட்டியாளராகக் கருதுகின்றனர்.
பவர் பேஸ்லைனர்கள் ஆதிக்கம் செலுத்தும் சகாப்தத்தின் நடுப்பகுதியில் வந்து விளையாட முடியாத ஆல்-கோர்ட் தாக்குதல் பாணியை செதுக்க அனுமதித்தது ரோஜர் பெடரரின் மேதை. நடால், அவரது விளையாட்டுத் திறமை மற்றும் தனித்துவமான ஷாட்மேக்கிங் மூலம், பவர் பேஸ்லைன் கேமில் இருந்தே மாற்று வித்தையை கண்டுபிடித்தார். இளம் ஜோகோவிச் போட்டிக்கு வந்தபோது, நடால் தனது வழக்கமான பரிமாண ஆட்டத்தில் இருந்து மேம்பட்டு தனக்கு சமமானவர் என்பதை நிரூபித்தார்.
இந்த இரண்டு வீரர்களையும் எதிர்கொள்ள அவர் ஆற்றிய பங்கு, சில காவியமான போட்டிகள் மற்றும் வெற்றிகளை உருவாக்க கடைசி புள்ளி வரை போராடிய விதம், டென்னிஸ் பற்றி அவர் மாற்றியமைத்த கருத்துக்கள் அனைத்தும் அவரது களிமண் மகத்துவத்துடன் கணக்கிடப்பட வேண்டும்.
இத்தகையை வியக்க வைக்கும் சாதனைகளை படைத்திருக்கும் ரஃபேல் நடால், அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினின் மலகா நகரில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டிதான் அவர் ஆடும் கடைசி போட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடைசி மூச்சு வரை போராடும் குணம், காயம் பட்டபோதிலும் மீண்டு வந்து வெல்லும் வேட்கை, பிரமிக்க வைக்கும் கடின உழைப்பு என அனைத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார் நடால். அவர் களிமண் ஆடுகளத்தில் மட்டுமல்ல, மற்ற மைதானத்திலும் மன்னாதி மன்னன், ராஜாதி ராஜா தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“