இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 171 ரன்களை இலங்கை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா வென்றது.இன்று டி20 போட்டி கொழும்பு பிரமதசா மைதானத்தில் தொடங்கியது.
மாலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸில் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்யுமாறு இலங்கையைக் கேட்டது. முதல் விக்கெட் 23 ரன்னில் இலங்கை அணிக்கு விழுந்தது.இலங்கை வீரர் முன்னவீரா 53, பிரியாசன் 40 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பு 170 ரன்கள் எடுத்தது.
171 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.