Advertisment

நேர்மைக்கு குந்தகம் விளைவித்த ஸ்மித்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அதிரடி மாற்றம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நேர்மைக்கு குந்தகம் விளைவித்த ஸ்மித்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அதிரடி மாற்றம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பந்தை சேதப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பதவியைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் தற்போது விலகியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாக அதிகாரி சுபின் பருச்சா கூறுகையில், "கேப்டவுனில் நடைபெற்ற சம்பவம் கிரிக்கெட் உலகை அசைத்து பார்த்துள்ளது. நாங்கள் இவ்விவகாரம் குறித்து பிசிசிஐ-யிடம் ஆலோசனையில் ஈடுபட்டோம். ஸ்மித்துடன் எப்போதும் போல தொடர்பில் உள்ளோம். நிலைமையை கருத்தில் கொண்டு, ஸ்மித் அவராகவே கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல்-ல் எந்தவித தடையும் இன்றி ராஜஸ்தான் அணி செல்ல வேண்டும் என விரும்புவதாகவும், நிலையான ஆதரவு கொடுத்த பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனால், நாங்கள் அஜின்க்யா ரஹானேவை கேப்டனாக்குவது என்று முடிவு செய்துள்ளோம். எங்கள் அணிக்காக பல ஆண்டுகள் அவர் தொடர்ந்து விளையாடி வந்தவர் என்ற ரீதியில், அவருக்கு ராஜஸ்தான் அணியின் மதிப்பும், கலாச்சாரம் குறித்தும் நன்கு தெரியும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைசிறந்த கேப்டனாக அவர் செயல்படுவார் என்பதில் எங்களுக்கு துளியும் சந்தேகமில்லை" என்றார்.

ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளர் மனோஜ் பாதலே கூறுகையில், "விளையாட்டின் நேர்மையையும், நன்மதிப்பையும் பாதுகாப்பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்போதும் உறுதியாக இருக்கும். ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ரஹானே எனும் தலைசிறந்த வீரரை கேப்டனாக்கியுள்ளோம். எல்லா ரசிகர்களும் இந்தச் சூழ்நிலையில் ஒரு சமமான அணுகுமுறையை அணுக வேண்டியது அவசியம். விளையாட்டில் மிகவும் கவனமாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு இது கடினமான காலக்கட்டம்" என்றார்.

March 2018

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment