தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணி ஆரம்பம் முதலே சரிக்கலை எதிர்கொண்டது.
தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் 9 ரன்னிலும் ரோகித் சர்மா 15 ரன்னிலும் நடையை கட்டினர். அடுத்து வந்த விராத் கோலியும் 12 ரன்னில் அவுட் ஆக, இந்தியா 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன்பின்னர் வந்த ஹூடா ரன் எதுவும் எடுக்காமலும், ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். தற்போது இந்திய அணி 11 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
தினேஷ் கார்த்திக், சூர்ய குமார் யாதவ் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும், ரவிசந்திர அஸ்வின் 7 ரன்னிலும் புவனேஸ்வர் குமார் 4 ரன்னிலும் முகம்மது சமி ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
ஆனால் மறுமுனையில் சூர்ய குமார் யாதவ், நிதானமாகவும் அதேநேரம் அடித்து ஆடியும் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அவர் 40 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் சிங் 2 ரன்னுடன் களத்தில் நின்றார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் கண்டது.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக், பவுமா களம் இறங்கினர். இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். அவரின் பந்து வீச்சில் டி காக், கே.எல். ராகுலிடம் கேட்ச் ஆகி 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ரோஸ்ஸவ் ரன் எதுவும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் நடையை கட்டினார். மறுமுனையில் பவுமா நிதானமாக ஆடி 10 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் அவரும் முகம்மது ஷமி பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
தற்போது மார்க்ராம், மில்லர் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா 7.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
மார்க்ராம்- மில்லர் ஜோடி அபாரம்
தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 73 பந்துகளில் 101 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. இந்நிலையில் அபாரமாக ஆடிய மார்க்ராம் 41 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
மில்லரும் 44 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரியும், 3 சிக்ஸரும் அடங்கும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்க அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. மில்லர் 51 ரன்னிலும், பர்னெல் 1 ரன்னிலும் களத்தில் நின்றனர். இந்நிலையில் 19.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 133 ரன்னை எட்டியது.
கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. இந்நிலையில் 19ஆவது ஓவரின் 4ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மில்லர் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகம்மது ஷமி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil