5 சதங்கள் அடித்தும் தோல்வி; இந்திய அணிக்கு என்ன தேவை? நிரஞ்சனா நாகராஜன் கருத்து

148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 5 சதங்கள் அடித்தும் தோல்வியை கண்டது என்ற மோசமான சாதனை படைத்த இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 5 சதங்கள் அடித்தும் தோல்வியை கண்டது என்ற மோசமான சாதனை படைத்த இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

author-image
D. Elayaraja
New Update
Niranjana Nagarajan

இந்திய டெஸ்ட் அணி குறித்து கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் கருத்து

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி 5 சதங்கள் அடித்த நிலையிலும், பந்துவீச்சில், அசத்த தவறியதால், தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் கூறியுள்ளார்.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களாக இருந்த ரோகித் சர்மா, விராட்கோலி இருவரும் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டு, ஒரு இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

England tour BCCI removes Abhishek Nayar T Dilip as coaches of Indian team Tamil News

இதில் லீட்ஸ் மையதானத்தில் கடந்த ஜூன் 20-ந் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிர்ணையித்த 371 ரன்கள் இலக்கை நோக்கிய களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் முதல் இன்னிங்சில் சுப்மான் கில், ஜெய்ஸ்வால், பண்ட் ஆகியோர் சதம் கடந்து அசத்திய நிலையில், 2-வது இன்னிங்சில், ராகுல், பண்ட் இருவரும் சதம் அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி சார்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்டாலும் இறுதியில் இந்தியா தோல்வி அடைந்தது.

Advertisment
Advertisements

148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 5 சதங்கள் அடித்தும் தோல்வியை கண்டது என்ற மோசமான சாதனை படைத்த இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனிடையே, இந்த தோல்விக்கு காரணம் என்ன? அடுத்து இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜனை தொடர்புகொண்டு பேசினோம்.

5 சதங்கள் அடித்தும் இந்தியா தோல்வியை சந்தித்தது பற்றி என்ன நினைக்கிறீரர்கள்? 

5 சதம் என்று பார்க்கும்போது இந்தியா பேட்டிங்கில் சூப்பாராக விளையாடி இருக்கிறார்கள். இந்திய அணியின் தற்போது மாற்றத்திற்கான நேரம். அடுத்தடுத்து 3 பெரிய வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். அனுபவம் வாய்ந்த கேப்டனிடம் இருந்து தற்போது அணி ஒரு இளம் கேப்டனிடம் வந்துள்ளது. அதே சமயம், விராட்கோலி, ரோகித் சர்மா கேப்டன்சியுடன் சுப்மான் கில் கேப்டன்சியை ஒப்பிடுவது தவறு. அவருக்கு போதுமான டைம் கொடுக்க வேண்டும். விராட்கோலி மாதிரி பேட்டிங்கில் வர வேண்டும் என்று சுப்மான் கில் நினைக்கிறார். அதை அவருமே சொல்லி இருக்கிறார்.

 Virat Kohli scores 9000 runs in Test cricket; India vs New Zealand 1st Test Bengaluru Tamil News

கேப்டன்சி பொருத்தவரை விராட் கோலியுடன் சுப்மான் கில்லை ஒப்பிடுவது தேவையில்லாதது. அவருக்கென்று தனி திறமை உள்ளது. அதேபோல் ஒரு டெஸ்ட் போட்டியை வைத்து அவரது திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. குறைந்தபட்சம் 15-20 டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட வேண்டும். அதே சமயம் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டன்சி ப்ரஷர் இருந்தாலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். பேட்டிங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.

அதேபோல் இங்கிலாந்து அதன் சொந்த மைதானம் என்பதால், பிச் தன்மையை கணித்து கடைசி நாளில் 400 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெறலாம் என்று அவர்கள் தயாராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்கள். 4-வது நாளில் ஸ்கோர் செய்ய முடியும் என்பது அவர்களது நம்பிக்கை. சுப்மான் கில்லும் டாஸ் வென்றிருந்தால் கண்டிப்பாக பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன் என்று சொன்னார்.

Rohit Sharma retires from Tests

இந்த ஒரு போட்டி தோல்வி என்பதால் இந்தியன் டெஸ்ட் கிரிக்கெட்டே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்திய அணியின் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பும்ரா சிறப்பாக இருக்கிறார். ஆனால் மற்ற மூவரும் கவனித்தால், பிரசித் கிருஷ்ணாவுக்கு டெஸ்ட் போட்டியில் அனுபவம் இல்லை. அதேபோல பீல்டிங்கில் இந்திய அணி 5 கேட்சுகளை தவறவிட்டது. அதில் 2 கேட்சுகளை பிடித்திருந்தால் கூட, மேட்ச் முடிவு மாறியிருக்க வாய்ப்பு உள்ளது, போட்டி இந்தியாவுக்கு சாதகமாகவும் இருந்தது அதே சமயம், எதிரணிக்கு சாதமாகவும் இருந்தது.

இப்போது இந்திய அணி மாற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தென்ஆப்பிரிக்க அணியின் கிரீம் ஸ்மித் கேப்டனாக இருக்கும்போது அவருக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியே கடந்த 2-3 வருடங்களுக்கு முன்பு மாற்றத்தை நோக்கி இருந்தார்கள். இந்திய அணி வீரர்களும் கடினமாக உழைப்பை கொடுக்கிறார்கள். வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இதனால் இந்திய அணி மோசமான சாதனை செய்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

தங்களால் முடிந்தவரை வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். இங்கிருந்து எப்படி சிறப்பாக வெற்றியை நோக்கி பயணிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். விராட் கோலி இல்லை. நான் விராட் கோலியின் பெரிய ரசிகை. அவர் இல்லை என்பது வருத்தம் தான். ஆனால் அதை கடந்து போக வேண்டும். விராட்கோலியும் கேப்டன்சியில் முதல் போட்டி தோல்வி தான். அந்த போட்டியில் அவர் செஞ்சுரி அடித்திருந்தார். அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வந்தால் என்பதை மட்டும் தான் அப்போது பார்த்தோம். அவர் தோற்ற போட்டியை பார்க்கவில்லை.

Jasprit Bumrah returns for India vs England 5th Test AND will India Bowling combination change due to Dharamsala condition Tamil News

சுப்மான் கில் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார். ஆனால் அவருக்கான டைம் கொடுக்க வேண்டும். முதல் போட்டியில் சீனியர் ப்ளேயர்கள் ராகுல் மற்றும் பண்ட் ஆகியோர் சுப்மான் கில்லுக்கு ஆலோசனை சொன்னார்கள். சுப்மான் கில் விராட் கோலி மாதிரி இல்லாமல், வீரர்களின் ஆலோசனையை எடுத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். முதல் தொடரே இங்கிலாந்தில் கேப்டன்சி பண்ணுகிறார் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்திய அணியின் அவருமே திறமையாக வீரர்கள் தான் ஆனால் அவர்களுக்கான டைம் வேண்டும். 

வாஷிங்டன் சுந்தரை அணியில் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். அப்படி கொண்டு வந்தால் அணியின் பேட்டிங் இன்னும் வலுவாகும். அவர் இல்லை என்றால் நித்தீஷ்குமார் ரெட்டியை கொண்டவரலாம். வருங்காலத்தில் நித்தீஷ்குமார் மதிப்புமிக்க ப்ளேயராக வருவார். அவர் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்திருக்கிறார். அதனால் கண்டிப்பாக நித்தீஷ்குமார் ரெட்டி ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் வலிமை தேவையில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தான் தேவை. அதற்கு வாஷிங்டன் மற்றும் நித்தீஷ் ரெட்டி தான் சரியாக இருப்பார்கள். இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.

விராட், ரோகித் ஓய்வு: இந்த இந்திய இளம் படை உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது?

இந்த இந்திய அணி பயம் இல்லாத அணி. ரிஷப் பண்ட் ஆடிய ஷாட், சுப்மான் கில் கொடுத்த ஸ்ரெய்ட் ட்ரைவ், இங்கிலாந்து அணி வீரர்கள் 140 கி.மீ வேகத்தில் பந்துவீசுகிறார்கள். அதை இந்திய அணி வீரர்கள் பயமில்லாமல் எதிர்கொண்டு விளையாடுகிறார்கள். முன்பெல்லாம் டிப்பன்ஸ் விளையாடுவார்கள் ஆனால் இப்போது தொடக்கத்திலேயே வெளியில் தூக்கி அடிக்கிறார்கள். டி20 தலைமுறை வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அப்படியே இருக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்த இளம் படைக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்.

இங்கிலாந்து முன்னாள் வீரர்கள், இந்திய அணி இந்த தொடரை தோற்கும் என்று சொல்கிறார்கள். இதற்கு முன்பு அவர்கள் சொன்னபோதெல்லாம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொடர் எப்படி இருக்கும்?

இந்த தொடரை இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெறவே முயற்சிப்பார்கள். இரண்டு அணிகளும் போட்டியை முடிவை நோக்கி நகர்த்தவே பார்ப்பார்கள். கடுமையாக கட்டத்தில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களே அவர்களுககு வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார். 

Niranjana Nagarajan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: