/tamil-ie/media/media_files/uploads/2018/03/a545.jpg)
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலி, தோனி, பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓய்வை மற்ற வீரர்கள் எப்படி அனுபவித்து வருகிறார்களோ, சேட்டைக்காரன் விராட் கோலி நல்லாவே என்ஜாய் செய்து வருகிறார். அதுவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் கோப்பைகளை கைப்பற்றி வந்திருப்பதால், அதிக உற்சாகத்தில் இருக்கிறார் மனிதர்.
இது எல்லாத்துக்கும் மேல் புதுமாப்பிள்ளை வேறு! கேட்கவா வேணும்...! சரி! மேட்டருக்கு வருவோம். விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. உடலில் பல இடங்களில் டாட்டூ வரைந்து கொள்வது அவரது ஹாபி.
இந்த நிலையில், சமீபத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள 'ஏலியன்ஸ் டாட்டூ' எனும் கடைக்குச் சென்றிருக்கிறார் கோலி. யாரோ ஒரு கஸ்டமர் போல என்று நினைத்த ஊழியர்கள், அவரை சரியாக கவனிக்காமல் 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என்று பார்த்தும் பார்க்காமலும் சொல்ல, இதனை தூரத்தில் இருந்த கவனித்த மற்றொரு ஊழியர், கோலியை அடையாளம் கண்டுகொள்ள, ஒட்டுமொத்த கடையும் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது.
பிறகு, தனது இடது தோள்பட்டையில் ஏற்கனவே இருந்த 'கடவுள்களின் கண்' என்று அழைக்கப்படும் டாட்டூவை சுற்றி மேலும் சில டாட்டூக்களை வரைந்திருக்கிறார். பின், வளைத்து வளைத்து அனைவருக்கும் செல்பி போஸ் கொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறார் இந்த 'சேட்டையன்'!.
இந்தியா - இலங்கை முதல் டி20 போட்டி Live Score Card பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.