நாட்டிற்காக விளையாடும் காதலும், பசியும் இன்னும் குறையவில்லை... மீண்டு வருவார் 'சர்வைவா' யுவராஜ் சிங்

யுவராஜ் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக் கொடுத்துவிடமாட்டார். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அவர் மீண்டு வருவார். இனி அவர் தன்னை நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை

யுவராஜ் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக் கொடுத்துவிடமாட்டார். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அவர் மீண்டு வருவார். இனி அவர் தன்னை நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாட்டிற்காக விளையாடும் காதலும், பசியும் இன்னும் குறையவில்லை... மீண்டு வருவார் 'சர்வைவா' யுவராஜ் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரிலும், தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் அட்டவணையிலும் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை.

Advertisment

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததே யுவராஜ் சிங் அணியில் இடம் பிடிக்காததற்கான காரணம் ஆகும். நாட்டின் தலைசிறந்த முதல் 74 வீரர்கள் பட்டியலில் கூட யுவராஜ் சிங் இடம்பெறவில்லை.

முன்னர் கவாஸ்கர் காலத்தில் 'பீப் டெஸ்ட்' என உடற்தகுதி சோதனை வைக்கப்படும். அதனுடைய அட்வான்ஸ் வெர்ஷன் டெஸ்ட் தான் இந்த‘யோ-யோ' ஆகும்.

யோ-யோ டெஸ்ட் எப்படி இருக்கும்?

Advertisment
Advertisements

இந்த டெஸ்ட் மூலம் ஒரு வீரரால் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு நேரம் ஓட முடிகிறது என்பது கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை தொடர்ச்சியாக இரு இடைவெளிக்கு ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை அடுத்த பீப் சத்தம் வருவதற்குள் அடைய வேண்டும்.

இவ்வாறு வைக்கப்படும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால், ஒரு வீரர் 20 மதிப்பெண் எடுத்தால் அவர் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம்.

ஆனால், இதில் யுவராஜ் 16 மதிப்பெண்ணும் ரெய்னா 16.5 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் அணியில் இடம் பெறவில்லை. நன்றாக ஃபிட்டாக இருக்கும் கேப்டன் விராட் கோலி இந்த யோ-யோ டெஸ்ட்டில் சாதாரணமாக 21 மதிப்பெண்கள் எடுக்கிறார். ரவிந்திர ஜடேஜா 20 மதிப்பெண் எடுக்கிறார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் தாயார் அளித்துள்ள பேட்டியில், "கேப்டன் விராட் கோலியின் உடற்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது. விதிமுறைகள் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் யுவராஜ் தேர்வாகவில்லை. அதற்கு தேர்வுக்குழுவினர், 'யுவராஜுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது' என்றனர். ஆனால், இப்போது ஆஸி.,க்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் யுவராஜ் இடம்பெறவில்லை. இதுகுறித்து தேர்வுக் குழுவினர் இதுவரை வாய்த் திறக்கவில்லை.

அணியில் இடம்பெற முடியாததால் உண்மையில் எனது மகன் மிகவும் மனமுடைந்துவிட்டார். ஆனால், விரைவில் தனது உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணியில் அவர் இடம்பெறுவார்.

யுவராஜ் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக் கொடுத்துவிடமாட்டார். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அவர் மீண்டு வருவார். இனி அவர் தன்னை நிரூபிப்பதற்கு ஒன்றுமில்லை.

publive-image

உலகக்கோப்பையில் இருந்து ஐபிஎல் கோப்பை வரை அனைத்தையும் வென்றுவிட்டார். ஆனால், நாட்டிற்காக எப்போது சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்ற அவரது காதலும், பசியும் இன்னும் குறையவில்லை.

யுவராஜின் ஓய்வு குறித்து கேள்விக் கேட்க இங்கே யாருக்கும் உரிமையில்லை. அது அவரது முடிவு. எப்போது ஓய்வு பெற வேண்டும் என விரும்புகிறாரோ அப்போது அவர் தனது முடிவை அறிவிப்பார்.

விராட் கோலி எப்போதும் யுவராஜுக்கு ஆதரவாக உள்ளார். கோலியைப் போன்று பக்கா உடற்தகுதியுடன் இருக்கும் ஒருவர், தன்னை சுற்றியிருப்பவர்களும் அது போன்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சகஜமே. வயது ஒன்று தான் யுவராஜுக்கு அதிகமே தவிர மீண்டும் கடுமையாக உழைத்து அணியில் யுவி இடம்பெறுவார்" என்றார்.

Virat Kohli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: