Advertisment

ஜெர்க் ஆகாதீங்க ஸ்டூடண்ட்ஸ்... நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு ரிசல்ட்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிலும் ரேங்கிங் முறை கிடையாது...

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெர்க் ஆகாதீங்க ஸ்டூடண்ட்ஸ்... நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு ரிசல்ட்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய தளங்களில் அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை இனி பின்பற்றப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனால், சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதன்படி, நாளை மறுநாள் வெளியாவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிலும் ரேங்கிங் முறை பின்பற்றப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment