பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய தளங்களில் அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை இனி பின்பற்றப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனால், சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதன்படி, நாளை மறுநாள் வெளியாவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிலும் ரேங்கிங் முறை பின்பற்றப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.