தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி கடந்த 24 நாள்களாக நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், காவிரி ஆற்றுக்குள் இறங்கி, 8 பெண்கள் உள்பட, 15க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் உள்பட 15 விவசாயிகள் தைது
இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் லட்சுமி நிவேதா, மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காவிரி ஆற்றில் தீயணைப்பு துறையினர் நீந்தி சென்று
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோரிடம், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 15 விவசாயிகளை கைது செய்தனர்.
அய்யாக்கண்ணு பேட்டி
அப்போது பேசிய அய்யாகண்ணு, “உச்ச நீதிமன்றத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை. விவசாயிகளுக்கு மரியாதை இல்லை, கர்நாடகாவில் அரசியல் கட்சியினர் ஓரணியில் நிற்கின்றனர்.
தமிழகத்தில் அப்படியான நிலை இல்லை. எங்கள் போராட்டத்தின் இடையே இந்த பகுதி அமைச்சர் கே என் நேரு எங்களை வந்து சந்தித்தார். உங்களையெல்லாம் சிஎம் கிட்ட கூட்டிட்டு போகிறேன் என்றார்.
அனுமதி இல்லை
ஆனால் அதோடு அதனை அவர் மறந்து விட்டார்” என்றார். தொடர்ந்து, இன்று அமைச்சர் உதயநிதி வந்துள்ளாரே அவரை பார்க்க திட்டம் இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
அதற்கு, “அவர் எல்லாம் பெரிய ஆளுங்க. இவங்க எல்லாம் எங்களை பார்க்க மாட்டாங்க, இங்க விவசாயிகள் ஒரு அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர்.
போராட்டம் மாற்றம்
திருச்சியில் போராட்டம் செய்ய போலீசார் அனுமதிக்கிறது இல்லை. ஆகையால் கர்நாடக அரசை கண்டித்து தமிழக கர்நாடக எல்லையான ஓசூரில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“