Advertisment

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: முதல்வர் தரப்பு வாதம் நிறைவு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
18 MLA's disqualification case

18 MLA's disqualification case

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்துள்ளது. அரசுக்கொறடா தரப்பு வாதத்துக்காக வழக்கு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என கோரி அவருக்கு எதிராக, ஆளுநரிடம் புகார் கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர். தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார்.

இதனால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மாதம் முதல் விசாரித்து வருகின்றார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அப்போது 18 எம்.ஏல்.ஏகள் தரப்பில் வாதங்கள் தொடங்கியது. கடந்த மாதம் 23மற்றும் 24 ஆகிய தேதிகளில் மனுதரார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன், வாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆகஸ்ட் 3 மற்றும் 6 ஆம் தேதி தன்னுடைய இறுதி வாதங்களை மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் எடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய இறுதி வாதங்களை எடுத்துவைத்தார்.

இதனையடுத்து இன்று மூன்றாவது நாளாக முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிங்களை தொடர்ந்தார். அப்போது அவர், முதல்வருக்கு சட்டபேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 எம்.எல்.ஏகள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே கருதமுடியும். அதனால் தான், 18 எம்.எல்.ஏகளையும் பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார் என வாதிட்டார்.

முதல்வரை மாற்ற கோரி 18 எம்.எல்.ஏ கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால், முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது. ஆளுநருக்கு அளித்த கடிதம், சபாநாயகர் முன் வைத்த வாதங்கள், இந்த மனுவின் கோரிக்கை என அனைத்திலும் எடியூரப்பா வழக்கையே மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளதாக கூறிய மூத்த வழக்கறிஞர், எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகளும் எடுத்துகொள்ளவில்லை என வாதிட்டார்.

அரசியல் விவகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது எனவும், 18 எம்.எல்.ஏகள் ஆளுநருக்கு கடிதம் அளித்த பின்னர் ஆளுநரை எதிர்கட்சி தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

18 எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் முழுமையாக நியாயப்படுத்தியுள்ளார் எனவும் வாதிட்டார்.

இன்று முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து, அரசு கொறடா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை நீதிபதி எம். சத்தியநாராயணன் நாளைக்கு தள்ளி வைத்தார்.

அரசு கொறடா தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி வாதிட உள்ளார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment