தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுவிட்டுள்ளது. மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாவட்ட ஆட்சியராக கே.ராஜாமணியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமியும், நெல்லை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, தூத்துகுடி ஆட்சியராக வெங்கடேஷ் மற்றும் நாகை ஆட்சியராக சுரேஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.